ஈரான் ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் பிரதமர் அவசர பேச்சு
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் , ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி போர் சூழ்நிலை குறித்து தனது ஆழ்ந்த கவலைகளை பகிர்ந்து கொண்டார். பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, அமைதியை மீண்டும் நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் இந்த உரையாடலில் வலியுறுத்தினார். குறிப்பாக, கடந்த மாதம் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. […]













