ஐரோப்பா செய்தி

தலைமைத்துவ மாற்றத்தை வலியுறுத்தி பிரிட்டன் சுகாதார அமைச்சர் ராஜினாமா!

  • May 15, 2026
  • 0 Comments

பிரிட்டன் பிரதமர் Keir Starmer கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இருந்து Wes Streeting விலகியுள்ளார். சுகாதார அமைச்சராக பதவி வகித்த அவர், அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல்களில் லேபர் கட்சி சந்தித்த பின்னடைவு காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என லேபர் கட்சிக்குள்ளேயே வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருகின்றன. 30 இற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக திரும்பியுள்ளனர். இந்நிலையில் Wes Streeting பதவி துறந்துள்ள தலைமை மாற்றத்தையும் […]

இலங்கை செய்தி

இலங்கை – பெலாரஸ்: வான் வழி போக்குவரத்து குறித்து ஒப்பந்தம் கைச்சாத்து!

  • May 14, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான வான்வழிப் போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பெலாரஸ் போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் மேற்படி ஒப்பந்தங்களை பரிமாற்றிக்கொண்டனர். குறித்த ராஜதந்திர நகர்வானது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வான்வழிப் போக்குவரத்து வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் பொருளாதார மற்றும் பயணப் பரிமாற்றங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, பெலாரஸ் வெளிவிவகார […]

இலங்கை செய்தி

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’: வவுனியாவில் அஞ்சலி!

  • May 14, 2026
  • 0 Comments

இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளின் நினைவுகளைச் சுமந்த ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திப் பவனி’ இன்று (14) காலை வவுனியாவை சென்றடைந்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பமான இந்த ஊர்தி பவனி ஓமந்தை ஊடாக இன்று வவுனியா நகரை அடைந்தது. இதன்போது, வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அஞ்சலி செலுத்தியதுடன் அதனைத் தொடர்ந்து மாநகர சபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியில் நினைவேந்தல் […]

இலங்கை செய்தி

மின்னல் தாக்கி இளைஞன் பலி: யாழில் சோகம்!

  • May 14, 2026
  • 0 Comments

மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலியான பெருந்துயர் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ். சுழிபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் இன்றையதினம் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அனர்த்தம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை செய்தி

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையம் மாநகர சபைக்கே சொந்தம்: தீர்மானம் நிறைவேற்றம்

  • May 14, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் யாழ். மாநகர சபைக்கே முழுமையாக உரித்தானது என்றும், அதில் எவரும் அத்துமீறி உள்நுழைய முடியாது என்றும் யாழ். மாநகர சபையில் இன்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று மேயர் திருமதி விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது, மாநகர சபைக்கான முதலீடுகளும் சொத்துக்களும் சபைக்கே உரித்தானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினரும் முன்னாள் மேயருமான திருமதி […]

இலங்கை கல்வி

சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்!பொலிஸார் வலை

  • May 14, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்த சிறைக்கைதி ஒருவர், இன்று வியாழக்கிழமை சிறை அதிகாரிகளின் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார். தேவபுரம், காளிகோவில் வீதி, மொறக்கட்டாஞ்சேனையைச் சேர்ந்த பத்மராஜா டினேஸ் (வயது 36) என்ற கைதியே தப்பியோடியுள்ளார். நபர் ஒருவருடன் சண்டையிட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இவருக்கு, நீதிமன்றம் 3 மாத கால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. சம்பவ தினமான இன்று காலை, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இவரைக் கட்டுமானப் பணிகளுக்காகச் சிறைச்சாலைக்கு வெளியிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தோல்விக்கான முழு பொறுப்பையும் ஏற்கிறேன்; திமுக தலைவர்!

  • May 14, 2026
  • 0 Comments

“ தேர்தல் தோல்விக்கு கட்சி தலைவர் என்ற முறையில நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்போது அமைந்திருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் ஆட்சியை அமைத்திருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வந்தால் வெற்றி தோல்வி சகஜம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். […]

இலங்கை செய்தி

யாழ் மாநகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: NPP புறக்கணிப்பு!

  • May 14, 2026
  • 0 Comments

மே 18 – “தமிழின அழிப்பு நாள்” வாரம் ஆரம்பித்துள்ள நிலையில், யாழ் மனநகரசையிலும் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ் மாநகரின் முதல்வர் மதிவதனி தலைமையில், நடைபெற்ற குறித்த அஞ்சலியின்போது சபா மண்டபத்தில் வைக்கப்பட்ட பிரத்தியேக நினைவுப் படத்தின் முன்னாக ஈகைச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வை தேசிய மக்கள் சக்தி, ஈபிடிபி என்பன புறக்கணித்தன.

இலங்கை செய்தி

இலங்கையில் அடை மழை: 3,475 பேர் பாதிப்பு!

  • May 14, 2026
  • 0 Comments

இலங்கையில் புத்தளம் உட்பட 7 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 400 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 113 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மரணமொன்று பதிவாகியுள்ளது. 88 வீடுகள் பகுதியளவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. 489 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 310 பேர் 8 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். […]

உலகம் செய்தி

ஈரான் போர் குறித்து விரிவான பேச்சு இல்லை!

  • May 14, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பின்போது , உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து பேசப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. குறிப்பாக ஈரான் போர் தொடர்பில் பீஜிங் ஒரு ஆக்கபூர்வமான தீர்வை வலியுறுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்பினாலும், இது பற்றி விரிவாக கலந்துரையாடப்படவில்லை என தெரியவருகின்றது. ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைக்க சீனாவின் உதவியை அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. ஆனால் சீனா இதில் நேரடியாக தலையிடாமல் நடுநிலை வகித்துவருகின்றது. ட்ரம்ப் சீனா வருவதற்கு முன்னர் ஈரான் வெளிவிவகார அமைச்சர் […]

error: Content is protected !!