தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான வீ. ஆனந்தசங்கரிக்கும், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விஜித ஹேரத்துக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இலங்கை செய்தி

வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஆனந்தசங்கரி

  • July 3, 2026
  • 0 Comments

தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மூத்த அரசியல் தலைவருமான வீ. ஆனந்தசங்கரிக்கும், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விஜித ஹேரத்துக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:- “இலங்கையின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்தசங்கரியைச் சந்திப்பதற்கான நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தச் சந்திப்பின் போது, தனது நீண்டகால அரசியல் […]

இலங்கை செய்தி தமிழ்நாடு

ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்து தமிழக முதல்வரிடம் ஆவணம் கையளிப்பு

  • July 3, 2026
  • 0 Comments

தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தூதுக்குழுவினர், தமிழ்நாட்டு முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய்யைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதுடன், ஈழத் தமிழர்களின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூல ஆவணமொன்றும் முதல்வரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியப் பேரவை இன்று […]

நேட்டோ அமைப்பின் தலைவர்கள் அடுத்த வாரம் துருக்கி தலைநகரில் கூடவுள்ளனர். ஐரோப்பா செய்தி

துருக்கியில் ஒன்றுகூடும் நேட்டோ தலைவர்கள்

  • July 3, 2026
  • 0 Comments

நேட்டோ அமைப்பின் தலைவர்கள் அடுத்த வாரம் துருக்கி தலைநகரில் கூடவுள்ளனர். இந்த ராணுவக் கூட்டணியில் அமெரிக்கா தனது பங்களிப்பைக் குறைத்து வரும் சூழலில் முக்கிய முடிவுகளை எடுப்பதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்திய போர் ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பைப் பெறவில்லை என்பதுடன், பல தலைவர்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். எனினும், நேட்டோ அதிகாரிகளை மேற்கோள் காட்டி Reuters செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பெரும்பாலான நேட்டோ கூட்டணி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மனிதர்களை போலவே வடிவமைக்கப்பட்ட ரோபோக்கள் – சீனாவின் புதிய முயற்சி

  • July 3, 2026
  • 0 Comments

சீனாவின் முன்னணி ரோபோட்டிக்ஸ் நிறுவனமான UBTech, மனிதர்களுடனான தொடர்பை அதிநவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் தனித்துவமான மனித உருவ ரோபோக்களின் வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘U1’ என்று அழைக்கப்படும் இந்த ரோபோக்கள், மனிதர்களுக்கு ஒரு நெருங்கிய துணையாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ரோபோக்களின் மிகவும் தனித்துவமான அம்சம் என்னவென்றால், அவற்றை விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்க முடியும். அதன்படி, வாங்குபவர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்கள் அல்லது பிரபலமான பிரபலங்களைப் போலவே இந்த ரோபோக்களை ஆர்டர் செய்யும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். நெகிழ்வான, உண்மையான மனிதர்களைப் […]

ஐரோப்பா

நவல்னியின் மரணத்திற்குக் காரணமான 06 பேர் மீது தடை : ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி

  • July 3, 2026
  • 0 Comments

கிரெம்ளின் விமர்சகரான அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்குக் காரணமான நச்சுப்பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, 06 பேருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சில் இன்று தடைகளை வித்துள்ளது. நவல்னியின் மரணத்திற்குப் பிறகு அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்ட, குறிப்பாக எபிபாடிடின் போன்ற இரசாயன ஆயுதங்களை உருவாக்கும் பணியில் இந்த நபர்கள் ஈடுபட்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. குறித்த 06 பேரும் சொத்து முடக்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணிக்க தடை விதிக்கப்படுவார்கள் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

இலங்கை

தமிழக முதல்வர் விஜயை சந்தித்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • July 3, 2026
  • 0 Comments

தமிழ் தேசிய பேரவையின்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல் தலைவர்களும் அவர் உடன் இருந்தனர். அத்துடன் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றும் விஜயிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் […]

ஐரோப்பா

நேட்டோவை சோதிக்க போலந்தை குறிவைக்கும் ரஷ்யா

  • July 3, 2026
  • 0 Comments

நேட்டோவின் உறுதியைச் சோதிக்கும் நோக்கில் ரஷ்யா போலந்து மீது தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தாக்குதலில் போலந்தின் உள்கட்டமைப்புகளைத் தாக்குவது அல்லது தரைவழி ஊடுருவல் கூட இடம்பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நேட்டோ நாடுகளுக்குள் பதற்றத்தை அதிகரிக்கவும், உக்ரைனுக்கு உதவுவதை தடுக்கவும்  ரஷ்யா இத்தகைய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எல்லைப் பகுதியில் ஒரு “கலப்பினத் தாக்குதல்” நடத்தப்படுவது தொடர்பில் ரஷ்யா பரிசீலித்து வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  ஜிபிஎஸ் செயலிழப்பு அல்லது விபத்து நடந்ததுபோல் […]

இலங்கை

ஈஸ்டர் விசாரணைகளை முடக்குவதற்கு முயற்சி – ஹிஸ்புல்லாஹ் கண்டனம்

  • July 3, 2026
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எத்தகை உயரிய அந்தஸ்தில், பதவியில் அல்லது பொருளாதார பலத்துடன் இருந்தாலும் சரி, அவர்கள் தராதரம் பாராது கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.

காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி முஹம்மது நயீம் ஜந்தியா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. உலகம் செய்தி

ஹமாஸ் தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு

  • July 3, 2026
  • 0 Comments

காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி முஹம்மது நயீம் ஜந்தியா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7 அன்று கடத்தப்பட்ட மூன்று இஸ்ரேலிய கைதிகளை இவர் ஒரு சுரங்கப்பாதையில் அடைத்து வைத்திருந்ததாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அந்த மூன்று கைதிகளும் பின்னர் இஸ்ரேலியப் படைகளாலேயே தவறுதலாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் Shujayea Battalion பிரிவின் ராணுவப் பாதுகாப்புத் தலைவரான ஜந்தியா, புதன்கிழமை (15) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் […]

ஐரோப்பா

பிறப்பு விகித சரிவை சமாளிக்க பிரான்ஸ் வகுத்துள்ள புதிய திட்டம் – பெற்றோருக்கு விசேட விடுமுறை

  • July 3, 2026
  • 0 Comments

பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் பிரான்ஸில் பெற்றோர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனால் நேற்று முன்தினம் பூர்வாங்கமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் மகப் பேறின்மை என்பவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டத்தை ஜனாதிபதி மக்ரோன் 2024 இல் வெளியிட்டார். இதற்கமைய தாய்மாரும் தந்தையரும் தங்களுக்கு ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ள உரிமைகளுக்கு மேலாக ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் மேலதிகமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. […]