நவல்னியின் மரணத்திற்குக் காரணமான 06 பேர் மீது தடை : ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி
கிரெம்ளின் விமர்சகரான அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்குக் காரணமான நச்சுப்பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, 06 பேருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சில் இன்று தடைகளை வித்துள்ளது.
நவல்னியின் மரணத்திற்குப் பிறகு அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்ட, குறிப்பாக எபிபாடிடின் போன்ற இரசாயன ஆயுதங்களை உருவாக்கும் பணியில் இந்த நபர்கள் ஈடுபட்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.
குறித்த 06 பேரும் சொத்து முடக்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணிக்க தடை விதிக்கப்படுவார்கள் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நச்சுப்பொருள் ரஷ்யாவில் காணப்படவில்லை எனவும் இது தென் அமெரிக்காவில் உள்ள விஷ அம்புத் தவளைகளில் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மொஸ்கோ மறுத்து வருகிறது. அத்துடன் போதுமான ஆதாரங்களையும் கோருகிறது.





