நேட்டோவை சோதிக்க போலந்தை குறிவைக்கும் ரஷ்யா
நேட்டோவின் உறுதியைச் சோதிக்கும் நோக்கில் ரஷ்யா போலந்து மீது தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் தாக்குதலில் போலந்தின் உள்கட்டமைப்புகளைத் தாக்குவது அல்லது தரைவழி ஊடுருவல் கூட இடம்பெறலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேட்டோ நாடுகளுக்குள் பதற்றத்தை அதிகரிக்கவும், உக்ரைனுக்கு உதவுவதை தடுக்கவும் ரஷ்யா இத்தகைய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லைப் பகுதியில் ஒரு “கலப்பினத் தாக்குதல்” நடத்தப்படுவது தொடர்பில் ரஷ்யா பரிசீலித்து வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜிபிஎஸ் செயலிழப்பு அல்லது விபத்து நடந்ததுபோல் சித்தரிக்கும் வடிவில் ரஷ்ய அல்லது பெலாரஸ் துருப்புகள் போலந்து எல்லைக்குள் நுழையக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





