தமிழக முதல்வர் விஜயை சந்தித்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரிதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல் தலைவர்களும் அவர் உடன் இருந்தனர்.
அத்துடன் தமிழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றும் விஜயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம், இந்திய–ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.










