ஹமாஸ் தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு
காசாவில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தளபதி முஹம்மது நயீம் ஜந்தியா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
கடந்த 2023 அக்டோபர் 7 அன்று கடத்தப்பட்ட மூன்று இஸ்ரேலிய கைதிகளை இவர் ஒரு சுரங்கப்பாதையில் அடைத்து வைத்திருந்ததாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, அந்த மூன்று கைதிகளும் பின்னர் இஸ்ரேலியப் படைகளாலேயே தவறுதலாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பின் Shujayea Battalion பிரிவின் ராணுவப் பாதுகாப்புத் தலைவரான ஜந்தியா, புதன்கிழமை (15) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து ஹமாஸ் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.





