இலங்கை

பட்டதாரிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி

35 வயதிற்கு மேற்படாத 5,500 பட்டதாரிகள் விரைவில் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், மொழி, புவியியல் மற்றும் வர்த்தகம் ஆகிய பாடங்களுக்கு மூன்று மொழிகளில் இருந்தும் ஆசிாியா்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு அவா் குறிப்பிட்டுள்ளாா். அத்துடன், 7,500 கல்வியியற் கல்லுாாி ஆசிரியர்களுக்கு எதிா்வரும் 16ஆம் திகதி புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சாா் தொிவித்துள்ளாா். இங்கு மேலும் கருத்து தொிவித்த அவா், […]

ஐரோப்பா

சபோர்ஜியா அணுவாலைக்கான விஜயத்தை தாமதப்படுத்தும் ரஃபேல் க்ரோஸி!

  • June 14, 2023
  • 0 Comments

பாதுகாப்பு காரணங்களுக்காக அணுசக்தி கண்காணிப்பு குழு ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கான விஜயத்தை தாமதப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழுவின் தலைவர், பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜபோரிஜியா அணுமின் நிலையத்திற்கான தனது விஜயத்தை நாளை வரை தாமதப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி கண்காணிப்பு குழு Kakhovka அணை இடிந்ததால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய சபோர்ஜியா ஆலைக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது. சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோஸி, “பாதுகாப்பாக பயணிக்க காத்திருக்கிறார்” என்று உக்ரைனிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரி […]

புகைப்பட தொகுப்பு

நம்புங்க.. இது நம்ம “பேபி சாரா” தான்! மயங்க வைக்கும் புகைப்படங்கள்….

  • June 14, 2023
  • 0 Comments

/*! elementor – v3.13.3 – 28-05-2023 */ .elementor-widget-image{text-align:center}.elementor-widget-image a{display:inline-block}.elementor-widget-image a img[src$=”.svg”]{width:48px}.elementor-widget-image img{vertical-align:middle;display:inline-block} photo credit saraarjun.offical instagram பொன்னியின் செல்வன் படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்த போது…. தெய்வத்திருமகள் படத்தில் நிலா பாப்பாவாக நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட சாரா அர்ஜுன் இளம் பெண்ணாக மாறி உள்ள சாரா அர்ஜுன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் தேவதையாக காட்சியளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தமிழில் கவிதையையும் கேப்ஷனாக கொடுத்துள்ளார். 2011 -ம் […]

இலங்கை

இலங்கையில் இளம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : வைத்தியர்கள் எச்சரிக்கை!

  • June 14, 2023
  • 0 Comments

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்போது இயற்கையான சருமத்தைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது என வலியுறுத்திய அவர்,  சில பெண்கள் சரியான விளக்கமின்றி சருமத்தை வெண்மையாக்கும் முகப் பூச்சுகளை (கிரீம்) பயன்படுத்துவது கூட புற்றுநோயின் தாக்கத்துக்கு காரணமாக அமையலாம் எனவும் எச்சரிக்கை […]

இலங்கை

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுதருவதாக கூறி மோசடி செய்த தம்பதியினர்!

  • June 14, 2023
  • 0 Comments

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி மோசடி செய்த தம்பதியினர் இன்று (14)  கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கேகாலையில் கைது செய்யப்பட்ட குறித் தம்பதியினருக்கு எதிராக 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், நிலையில், பொலிஸார் நேற்று கைது செய்திருந்தனர். வெளி நாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு ஈடாக மக்களிடமிருந்து 820,000. ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக 46 பேர் முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளதாக […]

இலங்கை உலகம்

கின்னஸ் உலக சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்!

  • June 14, 2023
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இலங்கை இராணுவ மருத்துவர்கள் இன்று (14) மேற்கொண்ட சத்திரசிக்சையின் மூலமே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில்  கப்டன் (டாக்டர்) டபிள்யூ.பி.எஸ்.சி பத்திரத்ன மற்றும் டாக்டர் தமாஷா பிரேமதிலக ஆகியோருடன் இணைந்து, சிறுநீரக ஆலோசகர், லெப்டினன்ட் கேணல் டாக்டர். கே. சுதர்ஷன், கொழும்பு இராணுவ மருத்துவமனையின் ஜெனிட்டோ சிறுநீர் பிரிவுத் தலைவர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். கேணல் டாக்டர் யு.ஏ.எல்.டி பெரேரா மற்றும் […]

இலங்கை

யாழில் முச்சக்கர வண்டி கவிழந்து விபத்து : 11 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

  • June 14, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் –  கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று கவிழந்து விபத்துக்குள்ளாகியதில் முன்பள்ளி சிறுவர்கள் 11 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் சிக்கிய முன்பள்ளி சிறுவர்கள் 11 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியின் சாரதியும் விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்பள்ளி சிறுவர்களை அதிகளவில் ஏற்றியமையால் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

  • June 14, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியினால் இன்று புதன்கிழமை (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை  318.9974 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல் கொள்வனவு விலை 303.1925  ரூபாவாக பதிவாகியுள்ளது.  யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325 ரூபா 78 சதமாகவும், விற்பனை பெறுமதி 345 ரூபா 34 சதமாவும் பதிவாகியுள்ளது. மேலும்  கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 10 சதமாக பதிவாகியுள்ள அதேவேளை  விற்பனை பெறுமதி […]

வட அமெரிக்கா

லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக பலரை ஏமாற்றிய கனடிய பெண் கைது

  • June 14, 2023
  • 0 Comments

கனடாவின் ஆல்பர்ட்டா மற்றும் மனித்தோபாவில் வாழும் முதியவர்களைக் குறிவைத்து ஏமாற்றும் இளம்பெண் ஒருவர் சிக்கியுள்ளார். 2022 முதல், ஆறு மாதங்களுக்கு கனடாவின் ஆல்பர்ட்டா மற்றும் மனித்தோபாவில் வாழும் முதியவர்களைக் குறிவைத்து பெண் ஒருவர் மோசடி ஒன்றை அரங்கேற்றியுள்ளார். அந்த முதியவர்களை தொலைபேசியில் அழைக்கும் அந்தப் பெண், அவர்களுக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறுவார். மகிழ்ச்சியடையும் அவர்களிடம் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பரிசுத்தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு சிறு தொகையைக் கட்டணமாக செலுத்தவேண்டியிருக்கும் என்று கூறுவார் அவர். எப்படியும் லொட்டரியில் […]

இலங்கை

மஹர சிறைச்சாலை கலவர விவகாரம் : சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவு!

  • June 14, 2023
  • 0 Comments

மஹர சிறைச்சாலையில் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின்போது உயிரிழந்த கைதி ஒருவரின் மனைவி தாக்கல் செய்த மனுவிற்கு அமைய மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து  சந்தேக நபர்களையும் கைதுசெய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் உத்தரவிடுமாறு மனுதாரர் வலியுறுத்தியுள்ளார். கைதிகளின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்ட வெலிசர நீதிவான்  இச்சம்பவத்தோடு தொடர்புடையவர்களை […]