இலங்கை செய்தி

இளைஞர் புரட்சியின்போது பின்வாங்கியது ஏன்? நாமல் விளக்கம்

படையினரைக் களமிறக்கி நாம் ‘அரகலய’வை ஒடுக்கவில்லை. இளைஞர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே நாம் ஓரடி பின்வாங்கினோம். எமது இந்த மனிதாபிமான அணுகுமுறையைப் பலவீனமாகக் கருதிவிட வேண்டாம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

படையினரைக் களமிறக்கி நாம் ‘அரகலய’வை ஒடுக்கவில்லை. இளைஞர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே நாம் ஓரடி பின்வாங்கினோம். எமது இந்த மனிதாபிமான அணுகுமுறையைப் பலவீனமாகக் கருதிவிட வேண்டாம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

“அரகலய காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. அக்காலப்பகுதியில் இளைஞர்கள் மீது கோட்டாபய ராஜபக்ச எவ்வித வன்முறையையும் ஏவவில்லை.

இளைஞர்களின் போராட்டங்களை இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் எவ்வாறு கையாண்டன என்பதை நாம் பார்த்தோம்.

ஆனால், நாங்கள் ஓரடி பின்வாங்கினோம். இளைஞர்களைக் கொன்றுவிட்டு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள நாங்கள் முற்படவில்லை. இந்த மனிதாபிமான அணுகுமுறையைப் பலவீனமாகவோ அல்லது இயலாமையாகவோ கருதிவிட வேண்டாம்.

படையினரைக் களமிறக்கி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள எம்மால் முடிந்திருக்கும்; ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. மக்களின் பக்கம் நின்று ஓரடி பின்வாங்கினோம்.” – என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை