இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை உடன் கைவிடுமாறு மனோ வலியுறுத்து

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்தும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்தும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:

“தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்காக நாம் ஒன்றிணைந்து போராடினோம். ஆனால், அந்த பழைய தோழரை இன்று காண முடியவில்லை.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்குச் சட்டத்தரணிகள் சங்கம் ஏற்கனவே கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. எனவே, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசாங்கம் இந்தத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.”– என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை