இலங்கை

மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் – அதிரடியாக கைது

  • June 14, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதான மாணவிக்கே ஆசிரியர் இவ்வாறு பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது தொடர்பில் மாணவி தன் தாயாரிடம் முறையிட்டுள்ளார். பாடசாலை அதிபரிடம் முறையிடப்பட்ட போது உரிய நடவடிக்கை எடுக்காததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியர் கடந்த திங்கட்கிழமை […]

இந்தியா

மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரம்! பெண் உட்பட 9 பேர் பலி

மணிப்பூரின் காமென்லோக்கில் உள்ள ஒரு கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உட்பட 9 பேர் கொல்லப்பட்டத்துடன் மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு ஏற்பட்ட இந்த வன்முறைக்கு பிறகு மீண்டும் அப்பகுதியில் ஊரடங்கு தளர்வு நேரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரின் 16 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது, அதே நேரத்தில் வடகிழக்கு மாநிலம் முழுவதும் இணைய […]

கல்வி வட அமெரிக்கா

கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • June 14, 2023
  • 0 Comments

கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவித்தல் ஒன்றை IDP Education வெளியிட்டுள்ளது.அதாவது, படிப்பு, இடம்பெயர்வு அல்லது வேலைக்கான மிகவும் பிரபலமான ஆங்கில மொழித் தேர்ச்சி சோதனைகளில் ஒன்றான IELTS தேர்வின் புள்ளிகள் குறித்து சில மாற்றங்களை IDP Education அறிவித்துள்ளது . அதன்படி IELTS தேர்வாளர்கள் ஆகஸ்ட் முதல் தேர்வின் அனைத்துப் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 6.0 புள்ளிகளை பெற வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முறையானது வரும் ஆகஸ்ட் 10 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் […]

உலகம்

அவசர நிலையை எதிர்கொள்ளும் உலகம் : ஐ.நா வெளியிட்ட தகவல்!

  • June 14, 2023
  • 0 Comments

சூடான், உக்ரைன் போர் காரணமாக சுமார் 110 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. மோதல்கள், துன்புறுத்தல்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார். இது குறித்து ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் ஐ.நா அகதிகள் நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் பிலிப்போ கிராண்டி,  கடந்த ஏப்ரலில் இருந்து கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் சூடானில் நடைபெறும் உள்நாட்டு மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு […]

பொழுதுபோக்கு

மக்கள் நாயகனின் வாரிசு ரெடியாகி விட்டார்! அடுத்தது என்னவாக இருக்கும்?

  • June 14, 2023
  • 0 Comments

விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. நானும் ரவுடி தான் படத்தில் சிறுவனாக நடித்திருந்த சூர்யா சேதுபதி, இப்போது ஹீரோ லுக்கில் மாஸ் காட்டுகிறார். விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் கிளிக்#கோலிவுட்டின் வெரைட்டியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, நிற்கக் கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார். இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருவதோடு வெப் சீரிஸ்களிலும் கமிட்டாகியுள்ளார். ஜவான் ஷூட்டிங் முடிந்ததும் தமிழில் மிஷ்கின் உள்ளிட்ட இன்னொரு முன்னணி […]

பொழுதுபோக்கு

எனக்கும் அந்த மாதிரி படங்களில் நடிக்க ஆசை இருக்கு! மனம் திறந்த பிரியா பவானி சங்கர்

சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தற்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் ப்ரோமஷனுக்காக சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியா பவானி சங்கர் கலந்துகொண்டார். அந்த பேட்டியில் தொகுப்பாளர் […]

உலகம்

பிபோர்ஜோய் புயல் தாக்கத்தினால்- பாகிஸ்தானில் இருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேற்றம்

வடகிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் ‘பிபோர்ஜோய்’ அதிதீவிர புயல் குஜராத்தின் போர்பந்தரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இன்று காலை நிலை கொண்டிருந்தது. இது நாளை (வியாழக்கிழமை) மாலை குஜராத்தின் ஜாக்ஹா துறைமுகப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதி தீவிர புயல் கரையை கடக்கும் போது பலத்த மழையும், பலத்த காற்றும் வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், பாகிஸ்தானில் உள்ள கடற்கரை நகரங்கள் மற்றும் சிறிய தீவுகளில் வசிக்கும் […]

ஐரோப்பா

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுவாயுதங்களை விட சக்தி வாய்ந்த அணுவாயுதங்களை பெற்றுள்ளதாக பெலாரஸ் அறிவிப்பு!

  • June 14, 2023
  • 0 Comments

பெலாரஸ் ரஷ்யாவிடம் இருந்து தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பெறத் தொடங்கியுள்ளதாக அதன் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ  தெரிவித்துள்ளார். குறித்த அணுவாயுதங்கள் 1945 ஆம் ஆண்டு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளை விட மூன்று மடங்கு சக்திவாய்ந்தவை என்றும்  அவர் கூறினார். செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,   ரஷ்ய அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கு “எல்லாம் தயாராக உள்ளது” என்றும் கேட்டதை விட அதிகமாக பெறுவதற்கு சில காலங்கள் எடுக்கும் என்றும் கூறினார். பெலாரஸ் ஏற்கனவே […]

ஐரோப்பா

வரிசையாக கொல்லப்பட்டு வந்த பெண் மேலாளர்கள்; வெளிவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை

  • June 14, 2023
  • 0 Comments

பிரான்சில் 2021ஆம் ஆண்டு, தொடர்ச்சியாக மூன்று பெண் மேலாளர்கள் கொல்லப்பட்ட வழக்கு French HR murders என்றே அழைக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ஆம் திகதி, கிழக்கு பிரான்சிலுள்ள Alsace என்ற இடத்தில் மனிதவள மேலாளரான Estelle Luce என்பவர், பணி முடித்து வீட்டுக்குப் புறப்படும்போது, கார் பார்க்கிங்கில் மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டார்.சிறிது நேரத்திற்குப் பின், 50 கிலோமீற்றர் தொலைவில், Bertrand Meichel என்னும் மனிதவள மேலாளர் வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்ய வந்த […]

ஐரோப்பா

மேற்குலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் பெலாரஸ் : பின்னணியில் ரஷ்யா!

  • June 14, 2023
  • 0 Comments

பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் ரஷ்யாவின் அணுவாயுதங்களை பயன்படுத்தும் திட்டம் இல்லை என்றாலும், தங்கள் நாட்டை ஆக்கிரமிக்க முற்பட்டால் அணுவாயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தெரிவித்துள்ளாா். இது குறித்து அவரது அலுவலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுளு்ளது. உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடாகும். இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அந்நாட்டில் அணுவாயுதங்களை நிறுத்தப்போவதாக அறிவித்திருந்தார். இது மேற்குலக நாடுகளுக்கு வெளிப்படையான எச்சரிக்கையாக அமைந்தது. […]