படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டம் செயலகத்துக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை செய்தி

நீதி கோரி யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்

  • July 31, 2026
  • 0 Comments

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டம் செயலகத்துக்கு முன்பாக ஊடகவியலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். இதற்கமைய, யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதி அமைச்சர் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே, ஊடகவியலாளர்கள் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

பிரித்தானியாவில் பணியமர்த்தப்படும் ரோபோக்கள்

  • July 31, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின்  பல முன்னணி சில்லறை விற்பனையாளர்கள் இப்போது தங்கள் கிடங்குகளைத் தானியக்கமாக்குவதற்காக சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை நாடி வருகின்றனர். டெஸ்கோ, அஸ்டா மற்றும் நெக்ஸ்ட் உள்ளிட்ட பிரித்தானியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்கள், தற்போது சீன நிறுவனமான கீக்+ (Geek+) வழங்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த ரோபோக்கள் அலமாரிகளுக்கு அடியில் ஊர்ந்து செல்கின்றன, அலமாரிகளைத் தூக்குகின்றன, மேலும் அவற்றை கிடங்கின் குறுக்கே ஒரு பணியாளரிடம் கொண்டு சேர்க்கின்றன. இந்தத் திரும்பத் திரும்பச் செய்யப்படும் இயக்கங்களைத் தானியக்கமாக்குவது, பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் […]

இலங்கை

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை – 500000 இலட்சம் அபராதம் விதிப்பு

  • July 31, 2026
  • 0 Comments

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு செல்லும்  ரயில் ஒன்றில் நடமாடும் சிற்றுண்டிச்சாலையை இயக்கி வந்த நிறுவனம் ஒன்று தண்ணீர் போத்தல் ஒன்றின் விலையை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது. 120 மதிப்புள்ள 1,000 மி.லி குடிநீர் போத்தலின் விலையை 150 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் குறித்த நிறுவனத்தை சோதனை செய்து கையும் களவுமாக இந்த முறைக்கேட்டை கண்டுப்பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அனுராதபுர நீதவான் […]

ஐரோப்பா

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபர் கைது – நாடுகடத்த தீர்மானம்

  • July 31, 2026
  • 0 Comments

சைப்ரஸில் உள்ள பிரித்தானியாவின் விமானப் படைத் தளத்தை உளவு பார்த்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய -அசர்பைஜான் இரட்டைக் குடியுரிமை பெற்ற நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் பிரித்தானிய பொலிஸார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு லண்டனின் இஸ்லிங்டனைச் சேர்ந்த 44 வயதான ரஷாத் சுல்தானோவ், ஜூலை 17 அன்று சைப்ரஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் […]

ஐரோப்பா செய்தி

எல்லையை வலுப்படுத்தும் முயற்சியில் ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ

  • July 31, 2026
  • 0 Comments

ஸ்பெயினும் மொரோக்கோவும் எல்லை வேலியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஒரே நாளில் சுமார் 49,000 பேர் கடல் மற்றும் தரை வழியாக சட்டவிரோத பயணங்களை மேற்கொண்டு செவுட்டாவுக்கு பிரவேசித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மொராக்கோ எல்லையை சட்டவிரோதமாக கடந்த குறைந்தது 09 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் செவுட்டாவுக்குள் சட்டவிரோதமாக உட்பிரவேசிக்க முயற்சித்த நிலையில் குழப்பகரமான நிலமை ஏற்பட்டதாக அதிகாரிகள் விவரித்துள்ளனர். புலம்பெயர்ந்தோர் […]

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். இலங்கை செய்தி

வடக்கில் விரைவில் காணி விடுவிப்பு: பாதுகாப்பு பிரதி அமைச்சர் உறுதி

  • July 31, 2026
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் […]

இலங்கை இராணுவத்தின் 26-வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். இலங்கை செய்தி

இலங்கையில் புதிய ராணுவ தளபதி நியமனம்

  • July 31, 2026
  • 0 Comments

இலங்கை இராணுவத்தின் 26-வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் 25-வது தளபதியாக பணியாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு முன்னர், நிலந்த பிரேமரத்ன இவ்வருடம் ஜூன் மாதம் முதல் இராணுவத்தின் தலைமை அதிகாரியாக (Chief of Staff) பணியாற்றி வந்தார். இலங்கை பீரங்கிப் படையணியின் (Sri Lanka Artillery) மூத்த அதிகாரியான இவர், […]

டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிவிளாடிமிர் புடின் ஆகியோர் இந்தியாவிற்கு வருகை தர திட்டமிட்டுள்ளனர். இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

சீனா, ரஷ்ய ஜனாதிபதிகள் இந்தியா வருகை: ஏற்பாடுகள் தீவிரம்

  • July 31, 2026
  • 0 Comments

டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிவிளாடிமிர் புடின் ஆகியோர் இந்தியாவிற்கு வருகை தர திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆயத்தப் பணிகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இந்த உயர்மட்ட வருகைகள் தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த திங்கள் ( 27) மற்றும் செவ்வாய்க்கிழமை ( 28 இந்திய வெளியுறவுச் செயலாளர் […]

செய்தி பொழுதுபோக்கு

பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்

  • July 31, 2026
  • 0 Comments

தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 6000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். 1938ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த ஜமுனா ராணி அவரது 7வது வயதில் ‘தியாகய்யா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடகியாக நுழைந்தார். குழந்தைத் தனமான குரலுக்கு சொந்தக்காரரான ஜமுனா தமிழில் 1952ல் […]

24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் நடைபெறவுள்ள 2027 ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான 12 (Host) நகரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உறுதி செய்துள்ளது. செய்தி விளையாட்டு

2027 ஒருநாள் உலகக்கோப்பை:12 மைதானங்களை உறுதி செய்தது ஐசிசி

  • July 31, 2026
  • 0 Comments

24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தென்னாப்பிரிக்க பிராந்தியத்தில் நடைபெறவுள்ள 2027 ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான 12 (Host) நகரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உறுதி செய்துள்ளது. மொத்தம் நடைபெறவுள்ள 54 போட்டிகளில் பெரும்பாலான போட்டிகள் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க், செஞ்சுரியன், டர்பன், கெபர்ஹா, குகொம்போ சிட்டி, கேப் டவுன், பார்ல் மற்றும் புளோம் போன்டைன் ஆகிய எட்டு நகரங்களில் நடைபெறவுள்ளன. இறுதிப்போட்டி ‘வாண்டரர்ஸ்’ அல்லது ‘நியூலேண்ட்ஸ்’ மைதானத்தில் நடத்தப்படும். சிம்பாப்வேயின் ஹராரே, புலவாயோ மற்றும் விக்டோரியா […]