அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை – 500000 இலட்சம் அபராதம் விதிப்பு
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு செல்லும் ரயில் ஒன்றில் நடமாடும் சிற்றுண்டிச்சாலையை இயக்கி வந்த நிறுவனம் ஒன்று தண்ணீர் போத்தல் ஒன்றின் விலையை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது.
120 மதிப்புள்ள 1,000 மி.லி குடிநீர் போத்தலின் விலையை 150 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளனர்.
இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் குறித்த நிறுவனத்தை சோதனை செய்து கையும் களவுமாக இந்த முறைக்கேட்டை கண்டுப்பிடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து குற்றவாளிக்கு 500000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.




