மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – தாக்குதால்தாரி உள்பட மூவர் பலி
மொஸ்கோவில் பெண் ஒருவர் கொண்டுவந்த கையால் செய்யப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறைந்தது 21 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குட்ரிங்க்ஸ்காயா (Kudrinkskaya) சதுக்கத்தில் உள்ள இத்தாலிய உணவகத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உணவகத்திற்குள் நுழைய முயன்றப்போது பாதுகாப்பு ஊழியர் அவரை தடுத்ததாகவும், இதன்போதே வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும் மொஸ்கோ பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதில் தாக்குதல்தாரியான குறித்த பெண், பாதுகாப்பு ஊழியர் மற்றும் இத்தாலிய உணவகத்தின் வாடிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் பலர் தீவிர தன்மையான காயங்களை கொண்டுள்ளதாகவும், உயிருக்கு போராடி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பெயர்களையோ, அல்லது இதற்கு யார் காரணமாக இருந்திருக்கலாம் என்று தாங்கள் கருதுபவர்களையோ அதிகாரிகள் வெளியிடவில்லை.
மேலும் இதுவொரு தற்கொலைக்குண்டுத் தாக்குதலாக சந்தேகிக்கப்படுவதுடன், தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




