ஈரான் போருக்கு முடிவுக்கட்ட களத்தில் இறங்கிய மத்திய கிழக்கு நாடுகள் – தயாராகும் ஒப்பந்தம்
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் ஒன்றின் வரையறைகளை மத்தியக் கிழக்கு நாடுகள் எடுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இட்டுள்ள பதிவொன்றில், ஐந்து மாதங்களாக நீடித்து வரும் இந்த மோதலில் தற்போதைக்கு புதிய தாக்குதல்களுக்கு உத்தரவிடப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் தனது ட்ரூத் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவொன்றில், உருவாகி வரும் இந்த ஒப்பந்தம் உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியை “உடனடியாக, முழுமையாக, மற்றும் முற்றிலுமாகத் திறப்பதை உள்ளடக்கும்” என்று கூறியுள்ளார்.
“இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத இராணுவ பயங்கரவாதம், வலிமை மற்றும் சக்தியின் நிலைகளில், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகப் போரிட அமெரிக்கா ஆயத்தமாக உள்ளது.
இருந்தபோதிலும், ஒரு ஒப்பந்தத்தின் வரையறைகள் ஒப்புக் கொள்ளப்பட்டதால், எந்தவொரு தாக்குதலையும் நிறுத்தி வைக்குமாறு ஈரானும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளும் எங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன.
இது ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாக, முழுமையாக, மற்றும் முற்றிலுமாகத் திறப்பதையும், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு ஒரு முடிவையும் உள்ளடக்கும்,” என்று அவர் கூறினார்.
“இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலனுக்காகவும், அதேபோல் வெற்றிகரமான மற்றும் செழிப்பான ஈரானின் பிழைப்பிற்காகவும், விரைவாக ஒரு உடன்பாட்டை எட்ட முடிந்தால், தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டுள்ளேன்,” என்று அவர் மேலும் கூறினார்.




