உலகம்

அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது பிணைத் தொகை செலுத்தும் திட்டத்தை நிரந்தரமாக்க தீர்மானம்

  • August 1, 2026
  • 0 Comments

அமெரிக்க விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது பிணைத் தொகை செலுத்தும் திட்டத்தை நிரந்தரமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பொன்றில், பெரும்பாலும் ஆப்பிரிக்கா  உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா கோரி விண்ணப்பிக்கும் போது பிணைத் தொகையாக 20,000 டொலர்களை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வணிகம் மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்காக வழங்கப்படும் B1 மற்றும் B2 விசாக்களுக்குப் பொருந்தும். அமெரிக்க வெளியுறவுத் துறை, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் நிதித் துறை […]

ஐரோப்பா

கிரீஸில் ஒரேநாளில் 70இற்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவல்

  • August 1, 2026
  • 0 Comments

கிரீஸில் நேற்று 70 இற்கும் மேற்பட்ட  இடங்களில் காட்டுத்தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள சில பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவியதாகவும், இதனால் அந்த பகுதிகளில் இருந் மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்காக அதிகாரிகள் நீர் குண்டு வீசும் விமானங்களை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரேக்க தீயணைப்புப் படை அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளது.  

வட ஆப்பிரிக்காவில் உள்ள தனது 'செவுடா' (Ceuta) பகுதிக்குள் நுழைந்த பெருந்திரளான புலம்பெயர்ந்தோரின் படையெடுப்பை ஸ்பெயின் அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஸ்பெயினுக்குள் ஊருடுவியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்

  • August 1, 2026
  • 0 Comments

வட ஆப்பிரிக்காவில் உள்ள தனது ‘செவுடா’ (Ceuta) பகுதிக்குள் நுழைந்த பெருந்திரளான புலம்பெயர்ந்தோரின் படையெடுப்பை ஸ்பெயின் அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. தரை மற்றும் கடல் வழியாக எல்லையைக் கடந்த 50,000-க்கும் மேற்பட்ட மக்களில் பெரும்பான்மையானோர் தாங்களாகவே மீண்டும் தங்களது தாய்நாட்டிற்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். செவுடாவில் உள்ள ஸ்பெயின் அரசாங்கப் பிரதிநிதி தெரிவிக்கையில், எல்லையின் ஸ்பெயின் பகுதியில் 57 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மொராக்கோ பகுதியில் மேலும் சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார். எல்லை வேலியாக உள்ள தடுப்புச் சுவரில் […]

உலகம்

பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்ட FIFA தீர்மானம்

  • August 1, 2026
  • 0 Comments

உலகக் கோப்பைப் போட்டிகளில் தனியார் பங்குகளை விற்பனை செய்வதற்கான தனது முன்மொழியப்பட்ட திட்டத்தைக் கைவிட ஃபிஃபா முடிவு செய்துள்ளதாக தலைவர் கியானி இன்ஃபான்டினோ  அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் கால்பந்து சங்கங்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை மற்றும் பிற முக்கியப் போட்டிகளை நடத்துவதற்காக 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒரு புதிய துணை நிறுவனத்தை அமைக்கப்போவதாகவும், தனது பங்குகளில் 20 சதவீதத்தை வெளி முதலீட்டாளர்களுக்கு விற்கப்போவதாகவும் […]

இலங்கை

காற்றின் வேகம் திடீரென அதிகரிப்பு – கடலுக்கு செல்ல வேண்டாம்

  • August 1, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய படகுகள் கடலுக்குச் செல்வதை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடை செய்ய மீன்பிடி மற்றும் நீரியல் வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் நேற்று இரவு முதல் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றராக அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் களுத்துறை (பேருவளை வரை) ஆகிய கடல் பகுதிகளில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் […]

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 104 புதிய 'மெட்ரோ' பஸ்கள், வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இலங்கை செய்தி

தலைநகர் கொழும்பு வீதிகளை அலங்கரிக்கவுள்ள மெட்ரோ பஸ்கள்

  • August 1, 2026
  • 0 Comments

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 104 புதிய ‘மெட்ரோ’ பஸ்கள், வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன. ராகமை முதல் பத்தரமுல்ல வரையிலான வழித்தடங்களில் இந்தப் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் இயக்கப்படும் முக்கிய மத்திய நிலையமாகப் பொரளை விளங்கும் என்று ‘மெட்ரோ பஸ்’ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். முழுமையாகக் குளிரூட்டப்பட்ட சொகுசு வசதிகளைக் கொண்ட மெட்ரோ பஸ்களே இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பஸ்களில் பயணக் கட்டணம் செலுத்தும் நடைமுறை முற்றிலும் […]

கருத்து & பகுப்பாய்வு

ஒரேவளம், இருவேறு திசையில் பயணம் – நோர்வேயிடம் பிரித்தானியா பாடம் கற்க வேண்டும்..

  • August 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவை போலவே அதிக எண்ணெய் வளத்தை கொண்ட நாடுதான் நோர்வே. தற்போது பிரித்தானியாவும் எண்ணெய், எரிவாயு நுகர்வுக்கு அந்நாட்டை சார்ந்தே இருக்கிறது. நோர்வே உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு முக்கியமானக் காரணம் அந்நாடு தனது எண்ணெய் வளத்தை பயன்படுத்தி இலாபம் ஈட்டியமையே. அண்மையில் பிரித்தானியாவின் வடகடல் பகுதியில் உள்ள எண்ணெய் வளத்தை அகழ்ந்தெடுக்க புதிய பிரதமர் பர்னம் அனுமதி அளித்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் வருமானம் 02 பில்லியனாக […]

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று, பொதுநலவாய போட்டிகளில் இலங்கை தங்கப் பதக்கத்திற்காக காத்திருந்த 20 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். செய்தி விளையாட்டு

20 வருடங்களுக்கு பிறகு இலங்கை தங்க வேட்டை

  • August 1, 2026
  • 0 Comments

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப் பதக்கம் வென்று, பொதுநலவாய போட்டிகளில் இலங்கை தங்கப் பதக்கத்திற்காக காத்திருந்த 20 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா உட்பட பல பிரபலமான வீரர்களுடன் போட்டியிட்ட ருமேஷ் தரங்க, தனது சிறந்த முயற்சியாக 89.75 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, இந்த வெற்றியைத் தனது வசமாக்கினார். 2006-ஆம் ஆண்டு மெல்போர்ன் பொதுநலவாய போட்டியில் பளுதூக்குதல் வீரர் […]

ஐரோப்பா

ஸ்பெயினுடனான எல்லையை மூடிய இத்தாலி – ஷெங்கன் தடையற்ற நடமாட்ட முறை நிறுத்தம்

  • August 1, 2026
  • 0 Comments

சட்டவிரோத குடியேறிகள் ஸ்பெயினை முற்றுகையிட்டுள்ள நிலையில்,  அந்நாட்டுடனான தனது கடல் மற்றும் வான்வழி எல்லைகளை மூடுமாறு இத்தாலியின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இத்தாலியின் குடியேற்றப் பகுப்பாய்வு மற்றும் எல்லைப் பாதுகாப்புக் குழுவின் மதிப்பீடுகளின் அடிப்படையில், உள்துறை அமைச்சர் மத்தேயோ பியாண்டெடோசி  (Matteo Piantedosi) தலைமையில் நேற்று  காலை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான ஷெங்கன் தடையற்ற நடமாட்ட முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவிற்கு […]

உலகம்

ஈரான் மீது புதிய தாக்குதல் அலை – பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது குறி

  • August 1, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரத் தொடக்கத்தில் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது. முன்மொழியப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, தெஹ்ரானை சரணடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்டானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, கடுமையான இராணுவப் பதிலடி கொடுக்கப்படும் என்ற எச்சரிக்கைகளை மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், இராஜதந்திர ஈடுபாடுகள் […]