உலகம்

முக்கியக் கனிமங்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யும் சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்து

  • July 31, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முக்கியக் கனிமங்களை ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்தும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். பனிப்போர் கால பாதுகாப்பு உற்பத்திச் சட்டத்தை (DPA) பயன்படுத்தி அவர் இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளார். தொழிற் கழிவுகளில் உள்ள முக்கிய கனிமங்கள் மற்றும் அரிய தனிமங்களைத் தக்கவைக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது ஏற்றுமதி மீது கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த சட்டத்தின் மூலம் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு அவசியமான முக்கிய கனிமங்களின் […]

ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களம் முற்றாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் பொலிஸ் மீது தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் இலங்கை செய்தி

ஸ்ரீலங்கா பொலிஸா, ஜே.வி.பி. பொலிஸா? நாமல் கடும் சீற்றம்

  • July 31, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களம் முற்றாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய பொலிஸ் மா அதிபரின் கீழ் செயற்படும் பொலிஸ் மீது தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். வழக்கு விசாரணையொன்றிற்காக நேற்று நீதிமன்றத்திற்கு வருகை தந்த அவர், நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா பொலிஸ், இன்று ‘ஜே.வி.பி. பொலிஸாக’ மாற்றப்பட்டுள்ளது. பொலிஸார் சமர்ப்பிக்கும் […]

நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை - லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் , ரட்னகிரிய தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இன்று (31) தோட்டத் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார். செய்தி

குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி பலி: மலையகத்தில் சோகம்

  • July 31, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் , ரட்னகிரிய தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இன்று (31) தோட்டத் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை, லிப்பகலை தோட்டத்தைச் சேர்ந்த முத்து நாராயணசாமி (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாமஸ்டன் ரட்னகரிய தோட்டத்தில், தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக […]

உலகம்

ஆர்ஜென்டினா மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெளிநாட்டினரை நாடுகடத்த தீர்மானம்

  • July 31, 2026
  • 0 Comments

ஆர்ஜென்டினாவின் தேசிய நலனை பாதிக்கும் வகையில் செயற்படும் வெளிநாட்டினரை நாடுகடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்நாட்டின் மக்களுக்கு எதிராக பாகுபாடு அல்லது வன்முறையைத் தூண்டுவதாகக் கருதப்படும் வெளிநாட்டினரை  உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும் ஆணையில் அந்நாட்டின் ஜனாதிபதி ஜாவியர் மிலே (Javier Milei) கையொப்பம் இட்டுள்ளார். FIFA உலகக் கோப்பை போட்டியை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் மீது வெறுப்புணர்ச்சி கருத்துக்கள் அதிகம் பிரயோகிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆணை அர்ஜென்டினாவின் குடிவரவுச் சட்டத்தை கணிசமாக […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் உணவுப் பற்றாக்குறை – விலை உயர்வுக்கு சாத்தியம்

  • July 31, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக உணவு விநியோகத்தில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் 07 முக்கிய பகுதிகளில் வறட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியை வெகுவாக பாதித்துள்ளதுடன், உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையானது  பல்பொருள் அங்காடிகளில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும், நுகர்வோருக்கான மளிகைப் பொருட்களின் விலைகள் உயர்வதற்கும் வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது. உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் வெங்காயம் போன்ற வயல் காய்கறிகள் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன. சில விவசாயிகள் விளைச்சலில் 20 சதவீதம் வரை குறைவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். […]

ஜப்பானின் தெற்கு நகரமான குமாமோட்டோவுக்கு அருகே ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் செய்தி

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

  • July 31, 2026
  • 0 Comments

தென்மேற்கு ஜப்பானைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-லிருந்து 34 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குமமோட்டோ (Kumamoto) மாகாண அரசு வெள்ளிக்கிழமை இந்த எண்ணிக்கையை உறுதிப்படுத்தியதோடு, மேலும் ஆறு பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை உகி (Uki) நகரத்திற்கு அருகில் ஏற்பட்ட ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாகச் சுமார் 40,000 வீடுகளுக்கான மின்சாரம் தடைபட்டது, இரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன, மேலும் ஜப்பானின் தெற்குத் தீவான கியூஷுவின் (Kyushu) […]

ஐரோப்பா

அதிகாரங்களை பரவலாக்க பர்னம் எடுத்துள்ள முயற்சி – வரி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

  • July 31, 2026
  • 0 Comments

இங்கிலாந்து மேயர்கள் தங்கள் பகுதிகளில் வசூலிக்கப்படும் வருமான வரி மற்றும் வணிக வரிகளில் ஒரு பகுதியைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் ஆண்டி பர்னம் தெரிவித்துள்ளார். பர்னமின் இந்த முயற்சியானது , பிராந்திய ரீதியாக பொருளாதார வளர்ச்சியை  ஊக்குவிப்பதையும், வெஸ்ட்மின்ஸ்டரிலிருந்து பிரித்தானியா  முழுவதுமுள்ள உள்ளூர் சமூகங்களுக்கு அதிகாரத்தைப் பரவலாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், தற்போது ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடாளுமன்றங்களின் வசம் உள்ள, மேயர்கள் இந்த திட்டத்தின் ஊடாக தன்னிச்சையாக வரிகளை உயர்த்தும் அதிகாரத்தை […]

மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையையோ அரசு ஒருபோதும் தடுக்கவில்லை என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

மக்களின் போராட்ட உரிமையை அரசு பறிக்கவில்லை

  • July 31, 2026
  • 0 Comments

மக்களின் கருத்துச் சுதந்திரத்தையோ அல்லது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையையோ அரசு ஒருபோதும் தடுக்கவில்லை என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். அரசு ஜனநாயக வழியில் முன்னோக்கிச் செல்வதற்கு இத்தகைய ஆரோக்கியமான விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும் அவசியமானவை என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் நீதித்துறையைப் பலப்படுத்தவுமே மக்கள் தெளிவான ஆணையை வழங்கினர். கடந்த காலங்களில் அரசியல் தலையீடுகளால் பாதிக்கப்பட்டிருந்த […]

உலகம்

பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து – 32 தொழிலாளர்கள் மரணம்

  • July 31, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில்    நிலக்கரி சுரங்கத்தில் இடம்பெற்ற  வெடி விபத்தில் குறைந்தது 32  தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் 10 பேர் காணாமல்போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவின் (Quetta) புறநகர்ப் பகுதியில் நேற்று இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த வெடி விபத்தானது மீத்தேன் வாயுவின் தேக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவசரகால மீட்புக் குழுவினர் வருகை தந்ததுடன், ஆரம்பத்தில் 07 உடல்களை மீட்டுள்ளனர். அதைத் […]

அமெரிக்காவின் மின்னிசோட்டா (Minnesota) மாநிலத்தில் உள்ள பல உள்ளூர் குடிநீர் விநியோக அமைப்புகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள், ஈரானுடன் தொடர்புடைய ஒரு ஹேக்கர் குழுவின் வேலை என்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகம் செய்தி

அமெரிக்காவில் குடிநீர் சேவை முடக்கம்: பின்னணியில் ஈரான்?

  • July 31, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மின்னிசோட்டா (Minnesota) மாநிலத்தில் உள்ள பல உள்ளூர் குடிநீர் விநியோக அமைப்புகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள், ஈரானுடன் தொடர்புடைய ஒரு ஹேக்கர் குழுவின் வேலை என்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு நிறுவனம் மற்றும் அமெரிக்க புலனாய்வாளர்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவல்களின்படி, உள்ளூர் நேரப்படி ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் சுமார் 30 குடிநீர் அமைப்புகள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் முறையானது ஈரானின்ஆதரவு பெற்ற ஒரு […]