இலங்கையில் புதிய ராணுவ தளபதி நியமனம்
இலங்கை இராணுவத்தின் 26-வது தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்னவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் 25-வது தளபதியாக பணியாற்றி தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்திற்கு முன்னர், நிலந்த பிரேமரத்ன இவ்வருடம் ஜூன் மாதம் முதல் இராணுவத்தின் தலைமை அதிகாரியாக (Chief of Staff) பணியாற்றி வந்தார்.
இலங்கை பீரங்கிப் படையணியின் (Sri Lanka Artillery) மூத்த அதிகாரியான இவர், தனது இராணுவ சேவையில் பல முக்கியமான கட்டளை மற்றும் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.




