ஐரோப்பா

இறுதிச் சடங்கில் நவல்னியின் பெயரைக் கோஷமிட்ட ஆயிரக்கணக்கான மக்கள்!

மறைந்த ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதியின் இறுதிச் சடங்கு மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் வாழ்ந்த மேரினோ மாவட்டத்தில் உள்ள குவென்ச் மை சோரோஸ் தேவாலயத்திற்கு அவரது சவப்பெட்டியை ஏற்றிச் செல்லும் வாகனம் வெள்ளிக்கிழமை வந்தடைந்தது. நவல்னியின் சவப்பெட்டி தேவாலயத்திற்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது “நவல்னி” என்று மக்கள் உரத்த கோஷங்கள் எழுப்பினர். மேலும் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் உட்பட மேற்கத்திய இராஜதந்திரிகளும் இறுதிச் சடங்கிற்கு வந்துள்ளனர். “நாங்கள் உங்களை […]

இந்தியா

ரஷ்ய ராணுவத்தில் ‘சிக்கிக்கொண்ட 20 இந்திய பிரஜைகள்

ரஷ்ய ராணுவத்தில் சிக்கியுள்ள சுமார் 20 குடிமக்களை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. உயர் சம்பளம் மற்றும் ரஷ்ய குடியுரிமை போன்ற வாக்குறுதிகளால் ரஷ்ய இராணுவத்தில் சேருவதற்கு தாங்கள் ஈர்க்கப்பட்டதாக பல இந்திய ஆட்சேர்ப்புகள் தெரிவித்துள்ளனர். இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் புதுதில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “20-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டுள்ளனர் என்பது எங்கள் புரிதல். “நாங்கள் முன்கூட்டியே வெளியேற்றுவதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். நாங்கள் டெல்லியிலும் மாஸ்கோவிலும் ரஷ்ய […]

இந்தியா

பெங்களூரில் பிரபல உணவகத்தில் வெடித்த மர்ம பொருள் – நால்வர் படுகாயம்!

  • March 1, 2024
  • 0 Comments

பெங்களூரு நகரில் பிரபல உணவகம் ஒன்றில் மர்ம பொருள் வெடித்து சிதறிய விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ராமேஸ்வரம் கஃபே என்ற பெயரில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பெங்களூரு நகர மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள இந்த உணவகத்தில் எப்போதும் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் இன்று மதியம் ஏராளமானோர் சாப்பிடுவதற்காக உணவகத்தில் காத்திருந்தனர். மதியம் 12:56 மணியளவில் திடீரென உணவகத்தில் மர்ம […]

இந்தியா

கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ‌சோதனை

விழுப்புரம்:- விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபுவின் மைத்துனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் கலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரபுவின் தந்தை ஐயப்பா அவருடைய மனைவி தைலம்மாள் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரபுவின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் […]

பொழுதுபோக்கு

தம்பியை அடுத்து அண்ணனுடனும் ஜோடி சேர்ந்த அதிதி சங்கர்

  • March 1, 2024
  • 0 Comments

‘விருமன்’, ‘மாவீரன்’ படங்களுக்குப் பிறகு நடிகை அதிதி ஷங்கர் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, அவர் தற்போது அதர்வா முரளியுடன் ஜோடி சேர உள்ளார். இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற முத்திரையோடு நடிகை அதிதி சினிமாவில் நுழைந்திருந்தாலும் தன்னுடைய துறுதுறு நடிப்பாலும், பாடும் திறமையாலும் ரசிகர்களைக் கவர்ந்தார் அதிதி. நடிகர் கார்த்தியோடு ‘விருமன்’ படத்திலும் பின்பு சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்திலும் ஜோடி சேர்ந்தார். இப்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர் முரளியின் இளையமகன் ஆகாஷ் […]

தமிழ்நாடு

கோவையில் பிரபல பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

  • March 1, 2024
  • 0 Comments

கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் பத்ம சேஷாத்ரி பள்ளி(PSBB) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நிலையில் வடவள்ளி பொலிஸார் பள்ளிக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பள்ளியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசாரும் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர் இந்த தகவல் பரவிய நிலையில், பதற்றமடைந்த குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பள்ளி முன்பாக திரண்டு பதற்றத்துடன் குழந்தைகளை […]

இந்தியா

பாராளுமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படை வருகை

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக கோவை ரயில் நிலையம் வந்த 3″ கம்பெனி துணை இராணுவத்தினரை மாநகர தேர்தல் பிரிவு காவல்துறையினர் வரவேற்றனர். நாடாளுமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என பணிகளை துவங்கியுள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக கேரளாவில் இருந்து கோவை மாநகரம், திருப்பூர், மற்றும் நீலகிரி பகுதிகளுக்காக 3 கம்பெனி துணை இராணுவத்தினர் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கேரளாவில் இருந்து கொச்சுவேலி விரைவு […]

ஐரோப்பா

ரஷ்ய அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் இரகசிய நியமனம் : புடின் அதிரடி

ஜனாதிபதி விளாடிமிர் புடின், அதிகாரிகள் மத்தியில் விசுவாசத்தை உறுதிப்படுத்த ரஷ்ய அரசாங்க அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு “அரசியல் பயிற்றுவிப்பாளர்களை” இரகசியமாக நியமித்துள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது. “சமூக மற்றும் அரசியல் பணிக்கான துணைத் தலைவர்கள்” என்று அழைக்கப்படும் அரசியல் பயிற்றுனர்கள் – உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்கு மத்தியில் தங்கள் கடமைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தும் பணியில் இருப்பர் என தெரிவிக்கப்படுகிறது. மாஸ்கோ முழு அளவிலான படையெடுப்பைத் […]

பொழுதுபோக்கு

மகன் சஞ்சய்க்கு மறைமுகமாக தளபதி செய்த வேலை… விரைவில் அனைத்தும் வெளிவரும்

  • March 1, 2024
  • 0 Comments

விஜய் ஆட்ட நாயகனாக ஜொலித்து வரும் இந்த தருணத்தில் அரசியலிலும் கால் தடம் பதிக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளே நுழைந்து இருக்கிறார். இந்த சமயத்தில் இவருடைய மகனும் படிப்பை முடித்துவிட்டு இயக்குனராக அடியெடுத்து வைக்கப் போகிறார். அந்த வகையில் இவர் இயக்கப் போகும் முதல் படத்தை லைக்கா நிறுவனமான சுபாஸ்கரன் தான் தயாரிக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதற்காக ஜேசன் சஞ்சய் கிட்டத்தட்ட நான்கு […]

ஆசியா

மனிதாபிமான உதவியை நாடிய மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: சுதந்திர விசாரணை’க்கு பிரான்ஸ் அழைப்பு

மனிதாபிமான உதவியை நாடிய மக்கள் மீது இஸ்ரேலிய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சூழ்நிலைகள் குறித்து ‘சுதந்திர விசாரணை’க்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. ஐரோப்பா மற்றும் வெளிவிவகார அமைச்சர் Stéphane Séjourné இதனை கூறினார்: நேற்று காசா நகருக்கு அருகில் மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலிய தாக்குதலில் 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 280 பேர் காயமடைந்தனர் என காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இஸ்ரேலின் இராணுவம் பசியால் வாடும் மக்கள் மீது […]