சேவையில் இல்லாத 08 விமானங்களுக்கு 565 கோடி ரூபாயை வாடகை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 08 விமானங்கள் சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த விமானங்களுக்கான வாடகையாக 5,646.76 மில்லியன் ரூபாவை விமான நிறுவனம் செலுத்தியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது விமான நடவடிக்கைகளுக்கு 27 விமானங்களின் தேவையை கொண்டுள்ளது, தற்போது நிறுவனத்திடம் 24 விமானங்கள் மட்டுமே உள்ளன. அறிக்கையின்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்போது 18 விமானங்களைச் செயற்பாட்டிற்குப் பயன்படுத்துகிறது, மேலும் நிறுவனம் வைத்திருந்த 24 விமானங்களில் 08 […]












