உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம்: கச்சா எண்ணெய் விலை உயர்வு

வளைகுடாப் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் போதிலும், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்றும், அதற்கு தனது பெயரைச் சூட்டலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் யோசனை முன்வைத்துள்ளார்.

வளைகுடாப் பகுதியில் உள்ள கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் போதிலும், ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்றும், அதற்கு தனது பெயரைச் சூட்டலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் யோசனை முன்வைத்துள்ளார்.

தெற்கு ஈரானின் சிரிக் நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் கொல்லப்பட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“தற்போது ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்துள்ளதால், இதன் பெயரை ‘டிரம்ப் நீரிணை’ (TRUMP STRAIT) என மாற்றலாமா?” என்று அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்த மோதல் போக்கினால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு தினசரி கோடிக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய் விநியோகிக்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து கூறி வந்தபோதிலும், எண்ணெய் விலையில் எவ்வித குறைவும் ஏற்படவில்லை.

அதேவேளை, இந்த நீரிணை தனது கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகவும், போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளதாகவும் ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதனிடையே, எண்ணெய் தாங்கிப் படகு (Tanker) ஒன்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக சவுதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.

பிரிட்டிஷ் அரச கடற்படையுடன் தொடர்புடைய கண்காணிப்பு அமைப்பான UKMTO, ஹோர்முஸ் பகுதியில் தினமும் கப்பல்கள் தாக்கப்பட்ட வண்ணம் உள்ளதாகத் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்க ஆட்டோமொபைல் சங்கத்தின் (AAA) தரவுகளின்படி, கடந்த பிப்ரவரி 28 அன்று போர் தொடங்குவதற்கு முன் ஒரு கேலன் (3.8 லிட்டர்) பெட்ரோல் 3 டாலருக்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது அதன் விலை 4.12 டாலராக உயர்ந்துள்ளது.

டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி, அதன் உச்ச தலைவரைக் கொன்று போரைத் தொடங்கியபோது, இந்த மோதல் 6 வாரங்களில் முடிவுக்கு வரும் என டிரம்ப் உறுதியளித்திருந்தார்.

“சிறிய அளவிலான நடவடிக்கை” என டிரம்பால் ஆரம்பத்தில் வர்ணிக்கப்பட்ட இந்த மோதல், வாக்குறுதி அளிக்கப்பட்டபடி விரைவாக முடிவுக்கு வரவில்லை. மாறாக, இப்போரானது தற்போது ஏழாவது மாதத்தை எட்டியுள்ளது.

இருப்பினும், அமெரிக்க நலன்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வந்தபோதிலும், ஈரானை ராணுவ ரீதியாகத் தோற்கடித்து விட்டதாகவும், ஹோர்முஸ் பகுதி தனது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் டிரம்ப் தொடர்ந்து உரிமை கோரி வருகிறார்.

செவ்வாய்க்கிழமை அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் பதிலடி கொடுத்தால் “மிகவும் கடுமையான மற்றும் தீவிரமான தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும்” என டிரம்ப் எச்சரித்திருந்தார்.

எனினும், அடுத்த சில மணி நேரங்களிலேயே பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியது.

சிக்கலான ஒரு போரைத் தவறாகக் கையாண்டு வருவதாக விமர்சகர்கள் கூறி வரும் நிலையில், நிலைமை தங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்பதைக் காட்டவே டிரம்ப் “டிரம்ப் நீரிணை” என்ற இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

கடந்த மாதம் ஹோர்முஸ் நீரிணையை “அமெரிக்க பிராந்தியம்” எனக் கூறிய டிரம்ப், கனடாவுடனான வர்த்தக மோதல்களுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் கனடா எல்லைக்குட்பட்ட ஓன்டாரியோ ஏரியை (Lake Ontario) “அமெரிக்க ஏரி” (Lake America) எனத் தன்னிச்சையாகப் பெயர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி