இந்தியா

இந்தியாவில் கொட்டி தீர்த்த பருவமழை – 19 பேர் பலி

  • July 19, 2026
  • 0 Comments

இந்தியாவில் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரை ஒட்டியுள்ள வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் எட்டு பேரும், இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீரில் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தில் உயிரிழந்த 08 பேரில் நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு படையினர் அறிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 11 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 15 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜம்மு – காஷ்மீரில் அடுத்த இரண்டு நாட்களில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் – 7000 வீடுகள் பாதிப்பு

  • July 19, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சுமார் 7,000 வீடுகளில் குறைந்த அழுத்த நீர், விட்டுவிட்டு வரும் நீர் விநியோகம் அல்லது தண்ணீர் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உள்ளூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட கருவி கோளாறு காரணமாக இந்நிலை ஏற்பட்டதாக  சவுத் ஈஸ்ட் வாட்டர் (SEW) நிறுவனம் கூறியதுடன், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளது. எவ்வாறாயினும் இன்று மாலைக்குள் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

இலங்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

  • July 19, 2026
  • 0 Comments

இந்த ஆண்டு இதுவரை 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பிலியந்தல மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த மொத்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

உலகம்

சீனாவின் சிவப்பு பயங்கரவாதத்தை எதிர்க்க தைவானியர்களுக்கு அழைப்பு

  • July 19, 2026
  • 0 Comments

தைவான் தனது ஜனநாயகத்தைப் பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், சீனாவின் ஒரு பகுதியாக ஆகிவிடக்கூடாது என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி லாய் சிங்-டே (Lai Ching-te) வலியுறுத்தியுள்ளார். மேலும் பெய்ஜிங்கிலிருந்து வரும் “சிவப்பு பயங்கரவாதத்தை” எதிர்க்குமாறு தனது ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (டிபிபி) உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். டிபிபி-யின் வருடாந்திர மாநாடு இன்று இடம்பெற்ற நிலையில் இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அமைதிக் காலங்களிலும் தைவான் […]

ஐரோப்பா

இத்தாலியில் சம்பள உயர்வு கோரி பேரணியாக சென்ற முப்படையினர்

  • July 19, 2026
  • 0 Comments

இத்தாலியின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு சேவைகளைச் சேர்ந்த சுமார் 6,000 உறுப்பினர்கள் நேற்றைய தினம் ரோம் நகரில் பேரணியாக சென்றனர். அதிக ஊதியம், சிறந்த ஓய்வூதியம் மற்றும் வலுவான பணியிடப் பாதுகாப்புகளைக் கோரி அவர்கள் இந்த பேரணியை முன்னெடுத்துள்ளனர். நாட்டின் முக்கிய பாதுகாப்பு மற்றும் தற்காப்புத் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் இராணுவம், கடற்படை, விமானப்படை, கராபினேரி (Carabinieri ) மற்றும் கார்டியா டி ஃபினான்சா (Guardia di Finanza) ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர். […]

இலங்கை

விடைபெறுகிறேன் – இலங்கைக்கான சவூதி அரேபியத்தூதுவரின் உருக்கமான செய்தி

  • July 19, 2026
  • 0 Comments

இரு புனிதத்தலங்களின் காவலரின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான தூதுவராக எனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் இவ்வேளையில், எனது பதவிக்காலம் முழுவதும் இலங்கை அரசாங்கமும் மக்களும் வழங்கிய சிறந்த விருந்தோம்பலுக்கும் ஒத்துழைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சவூதி அரேபிய இராச்சியத்திற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்குமிடையிலான நெருக்கமான மற்றும் நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதற்குப் பங்களித்தமை எனக்குக் கிடைத்த பெரும் கௌரவமாகும். நமது இரு நாடுகளுக்குமிடையிலான நீடித்த உறவுகள் குறித்த மிகுந்த பெருமையுடனும், நமது நட்பு […]

உலகம்

பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு – 10 பேர் காயம்

  • July 19, 2026
  • 0 Comments

பெருவில் இன்று  5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது ஆண்டியன் பகுதியான ஜூனினில் (Junín) உள்ள சூபாக்கா (Chupaca) நகருக்கு அருகில், 24 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறித்த நிலநடுக்கம் பதிவாகி 17 நிமிடங்கள் கழித்து 3.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணியாளர்கள் அவசர சேவைகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

ஜோர்டானில் உள்ள அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை – விமான நிலையத்தை தவிர்க்குமாறு வலியுறுத்தல்

  • July 19, 2026
  • 0 Comments

ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அமெரிக்க குடிமக்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கையை இன்று  புதுப்பித்துள்ளது. இதற்கமைய அமெரிக்கக் குடிமக்கள் ஜோர்டானில் உள்ள அகாபா சர்வதேச விமான நிலையம் மற்றும் அகாபா துறைமுகத்திற்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஜோர்டான் அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு ஆலோசனைகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்கக் குடிமக்கள் ஜோர்டானில் உள்ள இராணுவத் தளங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை பாதுகாப்புச் சூழல் காரணமாக, ஜோர்டானில் பணிபுரியும் அத்தியாவசியமற்ற அமெரிக்க அரசாங்க […]

உலகம்

போர் பதற்றம் : டொலருக்கு நிகரான ரியாலின் பெறுமதி கடும் சரிவு

  • July 19, 2026
  • 0 Comments

ஈரானில் சமீபகாலமாக அதிகரித்து வரும் போர் சூழல் காரணமாக அந்நாட்டின் ரியால் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரியாலின் பெறுமதி நேற்றைய தினம் 1.94 மில்லியனைக் கடந்துள்ளது. ஏறக்குறைய 1.67 சதவீதத்தால் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும், டொலரின் பெறுமதி புதிய உச்சத்தை தொட்டுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டொலரைப் போலவே யூரோவின் மதிப்பும் அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு யூரோவின் பெறுதி 1.64 சதவீதத்தால் அதிகரித்து 2.22 மில்லியன் ரியால்களில் வர்த்தகமானது. இதேவேளை இந்த […]

இலங்கை

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

  • July 19, 2026
  • 0 Comments

கொழும்பு – தெஹிவளையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தெஹிவளை பொதுமயானத்திற்கு அருகில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.