இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு
இந்த ஆண்டு இதுவரை 18 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் பிலியந்தல மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மொத்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.





