கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கொலம்பியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 111 ஆக அதிகரிப்பு: அவசரநிலை பிரகடனம்

  • August 11, 2026
  • 0 Comments

கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நூற்றாண்டில் அந்நாட்டைத் தாக்கிய மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவென அதிகாரிகள் விவரித்துள்ளனர். திங்கள்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காலி (Cali), பெரைரா (Pereira), கிப்டோ (Quibdo) மற்றும் மேனிசேல்ஸ் (Manizales) உள்ளிட்ட மேற்கு கொலம்பிய நகரங்களை கடுமையாகப் பாதித்ததோடு, அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் பனாமாவிலும் உணரப்பட்டது. தலைநகர் போகொடாவில் இருந்து […]

உலகம்

கொலம்பிய நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 69 ஆக உயர்வு

  • August 10, 2026
  • 0 Comments

கொலம்பியாவின் பசிபிக் மாகாணமான சோகோவில், 79 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. தொடர்புடைய செய்தி கொலம்பியா நிலநடுக்கம்: 20 இற்கு மேற்பட்டோர் பலி

ஐரோப்பா

லண்டன் முழுவதும் திடீர் சோதனை – ஃபெராரி உள்ளிட்ட 90 வாகனங்கள் பறிமுதல்

  • August 10, 2026
  • 0 Comments

லண்டன் முழுவதும் பொலிஸார் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் , ​​8 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான மதிப்புள்ள 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காப்பீடு இல்லாத மற்றும் சமூக விரோத வாகன ஓட்டுதலுக்கு எதிராக பொலிஸார் இன்று திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் 3.7 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள அரிதான ஃபெராரி மான்சா SP2 காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முன்னறிவிப்பு ஏதுமின்றி, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் […]

உலகம்

போரில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த மக்களுக்கு இழப்பீடு கோரும் ட்ரம்ப்

  • August 10, 2026
  • 0 Comments

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் தனக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு கோரியதற்குப் பதிலளிக்கும் விதமாக, “அவர்கள் கொன்ற மற்றும் கடுமையாகக் காயப்படுத்திய அனைத்து மக்களுக்கும்” ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரப்போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இரு நாடுகளுக்கும் இடையே புதிய கப்பல் வழித்தடங்களை வரையறுக்கும் ஒப்பந்தத்தை ஓமானுடன் நெருங்கி வருவதாக ஈரான் வார இறுதியில் கூறியது. ஆனால், அந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு, இழப்பீடு, […]

ஐரோப்பா

பதின்ம வயதினருக்கு வலைவீச்சி – UK வில் இருந்து நாடுகடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்

  • August 10, 2026
  • 0 Comments

சமூக ஊடகங்களில் தன்னை ஒரு பதின்பருவத்தினராகக் காட்டிக்கொண்டு, 13 வயது சிறுமியை தன்வசப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த புகலிடக் கோரிக்கையாளருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 28 வயதுடையவர் என நம்பப்படும் அப்துல் கான், என்ற புகலிடக் கோரிக்கையாளர் 2015-ஆம் ஆண்டில்  சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் பெண்களை தன்வசப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.   இவரால் பதின்மவயதுடைய சிறுவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கு முன்பும் இவ்வாறான ஒரு […]

ஐரோப்பா

வெடிபொருட்களுடன் ஊடுருவும் ஆளில்லா விமானங்கள் – ஜேர்மனி எடுத்த தீர்மானம்

  • August 10, 2026
  • 0 Comments

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த விமான நிலையம் ஒன்றில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் ஒன்று இனங்காணப்பட்டதை தொடர்ந்து ஜெர்மனி தனது ஆளில்லா விமான எதிர்ப்பு காவல் பிரிவை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்தது. இராணுவ உபகரணப் போக்குவரத்திற்கான முக்கிய மையமான லீப்ஜிக்-ஹாலே விமான நிலையத்தில், உக்ரேனிய சரக்கு விமானம் ஒன்றின் அருகே வெடிபொருட்கள் நிரப்பட்ட ஆளில்லா விமானம் கண்டறியப்பட்டது. பின்னர் குறித்த விமானம் செயலிழக்கப்பட்டது. இந்த சம்பவம் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த […]

FIFA தலைவர் Gianni Infantino எதிரான அழுத்தங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இதனால் அவர் கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார். செய்தி விளையாட்டு

FIFA தலைவருக்கு நெருக்கடி: 3 கண்டங்களின் கூட்டமைப்புகள் போர்க்கொடி

  • August 10, 2026
  • 0 Comments

FIFA தலைவர் Gianni Infantino எதிரான அழுத்தங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இதனால் அவர் கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார். கால்பந்து விளையாட்டு எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானதல்ல எனத் தெரிவித்து, ஐரோப்பா (UEFA), வட மற்றும் மத்திய அமெரிக்கா (CONCACAF), ஆசியா (AFC) ஆகிய மூன்று கண்டங்களின் கூட்டமைப்புகள் இணைந்து காரசாரமான அறிக்கையை வெளியிட்டுள்ளன. FIFA வின் உலகக்கோப்பை உள்ளிட்ட முக்கியப் போட்டிகளில் தனியார் முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான திட்டத்தை இன்பாண்டினோ முன்மொழிந்து, பின்னர் சில நாட்களிலேயே அதைத் திரும்பப் […]

கொலம்பியாவின் மேற்குப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய அண்டை நாடுகளில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். உலகம் செய்தி

கொலம்பியா நிலநடுக்கம்: 20 இற்கு மேற்பட்டோர் பலி

  • August 10, 2026
  • 0 Comments

கொலம்பியாவின் மேற்குப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய அண்டை நாடுகளில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கொலம்பியாவின் தலைநகர் போகொட்டாவிலிருந்து (Bogota) மேற்கே சுமார் 400 கிலோமீட்டர் (250 மைல்) தொலைவில் உள்ள சொக்கோ (Choco) மண்டலத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் (San Jose del Palmar) நகராட்சிக்கு அருகே திங்கள்கிழமை இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக […]

ஐரோப்பா

பின்லாந்தை ஸ்வீடனுடன் இணைக்கும் புதிய ரயில் சேவை

  • August 10, 2026
  • 0 Comments

பின்லாந்தை ஸ்வீடனுடன் இணைக்கும் ஒரு புதிய பயணிகள் ரயில் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 1990-களுக்குப் பிறகு முதன்முறையாக வடக்கு பின்லாந்திலிருந்து தெற்கு ஐரோப்பா வரை நீளும் ஒரு ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கு பின்லாந்தில் உள்ள  Oulu  ரயில் நிலையத்தில் குறித்த ரயில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இந்த ரயில் தனது சேவையை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா செய்தி

இந்தியாவில் மீண்டும் மாணவர்கள் போராட்டம்

  • August 10, 2026
  • 0 Comments

ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் ஊழியர் தேர்வு வாரியம் (JSSC) மூலம் நடத்தப்பட்ட அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ‘ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா’ (JLKM) கட்சியின் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தலைமையில் மாணவர்கள் இன்று ராஞ்சியில் உள்ள சட்டப்பேரவையை நோக்கி முற்றுகைப் பேரணி நடத்தினர். 9 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு, தேவேந்திர நாத் மஹ்தோ ஸ்ட்ரெச்சரில் இருந்தவாறே இப்பேரணியில் […]