கொலம்பியாவில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 111 ஆக அதிகரிப்பு: அவசரநிலை பிரகடனம்
கொலம்பியாவில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 111 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நூற்றாண்டில் அந்நாட்டைத் தாக்கிய மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவென அதிகாரிகள் விவரித்துள்ளனர். திங்கள்கிழமை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காலி (Cali), பெரைரா (Pereira), கிப்டோ (Quibdo) மற்றும் மேனிசேல்ஸ் (Manizales) உள்ளிட்ட மேற்கு கொலம்பிய நகரங்களை கடுமையாகப் பாதித்ததோடு, அண்டை நாடுகளான ஈக்வடார் மற்றும் பனாமாவிலும் உணரப்பட்டது. தலைநகர் போகொடாவில் இருந்து […]













