இந்தியா, சீனாவுக்கிடையில் மீண்டும் தலைதூக்கும் எல்லைப் பிரச்சினை
இந்தியாவின் நடவடிக்கையானது எதிர்கால எல்லைப் பேச்சுவார்த்தைகளில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என சீன நிபுணர்களை மேற்கோள் காட்டி அந்நாட்டு அரச ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ (Global Times) செய்தி வெளியிட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 27 புவியியல் இடங்களுக்கு இந்தியா முறையான பெயர்களைச் சூட்டியதற்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்தப் பகுதிகள் சீனாவின் ‘சாங்னான்’ (Zangnan) பிராந்தியத்திற்குட்பட்டவை என அரச ஊடகமான குளோபல் டைம்ஸ் உரிமை கோரியுள்ளது. திபெத் தன்னாட்சிப் பகுதியின் ஒரு பகுதியாகச் சீனா உரிமை […]













