கொழும்பு கோட்டை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி: திட்டம் குறித்து ஆராய்வு இலங்கை செய்தி

கொழும்பு கோட்டை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி: திட்டம் குறித்து ஆராய்வு

  • August 24, 2026
  • 0 Comments

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் இந்நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் ஆகியவை தொடர்பாக, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கியின் முகாமையாளர் Gevorg Sargsyan உட்பட தூதுக்குழுவினருக்கும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கொழும்பு கோட்டையின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் […]

இலங்கை

எல் நினோவால் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

  • August 24, 2026
  • 0 Comments

எல் நினோ வானிலையால் எதிர்காலத்தில் மின்சாரத் தேவை அதிகரிக்கக்கூடும் என்றும், நீர் ஆதாரங்கள் வற்றுவதால் மின்சார உற்பத்தி குறையக்கூடும் என்றும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் திரு. கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான விலைகள் குறித்து இன்று உரையாற்றியபோது அவர் இவ்வாறு […]

உணவகங்களின் சுகாதாரமின்மை மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளுக்கு எதிராக மகாராஷ்டிர மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையாளர் துகாராம் முண்டே (Tukaram Mundhe) மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. இந்தியா செய்தி

உலகளவில் வைரலான உணவுப் பாதுகாப்பு ஆணையாளரின் அதிரடி வேட்டை

  • August 24, 2026
  • 0 Comments

உணவகங்களின் சுகாதாரமின்மை மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளுக்கு எதிராக மகாராஷ்டிர மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையாளர் துகாராம் முண்டே (Tukaram Mundhe) மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. மகாராஷ்டிராவின் உணவுப் பாதுகாப்புத் தலைவராக கடந்த மே மாதம் பொறுப்பேற்றதில் இருந்து, இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட சோதனைகளை அவர் நடத்தியுள்ளார். இதன் அடிப்படையில் டொமினோஸ் (Domino’s), பிட்சா ஹட் (Pizza Hut) மற்றும் மெக்டொனால்ட்ஸ் (McDonald’s) போன்ற சர்வதேச உணவகக் கிளைகள், புகழ்பெற்ற […]

யாழ்ப்பாணம், காரைநகர் - வேரப்பிட்டி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது. இலங்கை செய்தி

யாழ். காரைநகரில் ஆணின் சடலம் மீட்பு

  • August 24, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், காரைநகர் – வேரப்பிட்டி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்குச் சென்றவர்கள் அங்கு சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்து உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். மீட்கப்பட்ட சடலம் யாருடையது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பில் காரைநகர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் 8.7 கோடி இளைஞர்கள் வேலை, கல்வியின்றித் தவிப்பு இந்தியா செய்தி

இந்தியாவில் 8.7 கோடி இளைஞர்கள் வேலை, கல்வியின்றித் தவிப்பு

  • August 24, 2026
  • 0 Comments

இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பு, முறையான கல்வி அல்லது தொழிற்பயிற்சி எதுவும் இன்றித் தவித்து வருவதாக NIT ஆயோக் (NITI Aayog) வெளியிட்டுள்ள அண்மைய ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இந்தியாவின் தேசிய மாதிரி சர்வே (NSS) தரவுகளின் அடிப்படையில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு, தொழிற்பயிற்சிக் கட்டணப் சுமை ஏற்கனவே கல்விக்காகப் பெருந்தொகையைச் செலவிட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து இளைஞர்கள், தங்களின் தொழில் […]

இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்த 25 ஆவது சுற்றுச் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரு நாள் அரசுமுறைப் பயணமாகத் திங்கள்கிழமை பிற்பகல் பெய்ஜிங் சென்றடைந்தார். இந்தியா செய்தி

இந்தியா – சீனா எல்லைப் பேச்சு : பீஜிங் சென்றடைந்தார் அஜித் தோவல்!

  • August 24, 2026
  • 0 Comments

இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை குறித்த 25 ஆவது சுற்றுச் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக, இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரு நாள் அரசுமுறைப் பயணமாகத் திங்கள்கிழமை பிற்பகல் பெய்ஜிங் சென்றடைந்தார். சீன வெளியுறவு அமைச்சரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழு உறுப்பினருமான வாங் யீயின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ள எல்லைப் பிரச்சினைக்கான 25ஆவது சுற்றுச் சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில், […]

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 2,642 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்கா உலகம் செய்தி

கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் எபோலா பரவல்: ஆப்பிரிக்காவில் தொடரும் கொடூர மரணங்கள்

  • August 24, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 2,642 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இதுரி (Ituri) மற்றும் வடக்கு கிவு (North Kivu) மாகாணங்களில் புதிதாக 51 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காங்கோ நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான இந்த எபோலா பரவலைக் கட்டுப்படுத்த சர்வதேச சமூகத்தின் உதவியைக் கோரி திருத்தந்தை லியோ (Pope Leo) வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த […]

கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமானவர்கள், இன்று புனிதர்களைப் போல வேடமிட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முற்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

நாட்டை நாசமாக்கியவர்கள் இன்று புதிய வேடம்

  • August 24, 2026
  • 0 Comments

கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமானவர்கள், இன்று புனிதர்களைப் போல வேடமிட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முற்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: “2029 ஆம் ஆண்டு ஜனாதிபதியாவதாகக் கூறிக்கொண்டு, நாமல் ராஜபக்ச இன்று கிராமம் கிராமமாகவும், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் மற்றும் குளங்கள் […]

பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடரும் நோக்கில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெஹ்ரானுக்கு விஜயம் செய்கிறார் என ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகே Esmaeil ‌Baghaei தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

அவசரமாக ஈரான் விரைகிறார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி

  • August 24, 2026
  • 0 Comments

பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடரும் நோக்கில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெஹ்ரானுக்கு விஜயம் செய்கிறார் என ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகே Esmaeil ‌Baghaei தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் மத்தியஸ்தர் பாத்திரத்தை வகித்து வருகிறது. இந்த விஜயத்தின் போது, […]

இலங்கை மக்களில் 79 சதவீதமானோர் இந்தியாவை நேர்மறையாகப் பார்க்கிறார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கை செய்தி

79 வீதமான இலங்கையர்கள் இந்தியா மீது சாதகமான கண்ணோட்டம்

  • August 24, 2026
  • 0 Comments

இலங்கை மக்களில் 79 சதவீதமானோர் இந்தியாவை நேர்மறையாகப் பார்க்கிறார்கள் என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் எகனொமிக் ரைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த, இந்தியாவின் அண்டை நாடுகளுடனான உறவுகள் மற்றும் பிராந்தியத்தில் புதுடெல்லி எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர், இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் இந்தியாவை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பது குறித்து, பியூ ஆய்வு மையத்தின் (Pew Research Center) ஒன்றை மேற்கோள்காட்டி, அண்மைய ஆய்வை மேற்கோண்ட ஆய்வில், 79 வீதமான […]