உலகம் செய்தி

அவசரமாக ஈரான் விரைகிறார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி

பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடரும் நோக்கில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெஹ்ரானுக்கு விஜயம் செய்கிறார் என ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகே Esmaeil ‌Baghaei தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடரும் நோக்கில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெஹ்ரானுக்கு விஜயம் செய்கிறார் என ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பாகே Esmaeil ‌Baghaei தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் மத்தியஸ்தர் பாத்திரத்தை வகித்து வருகிறது.

இந்த விஜயத்தின் போது, சமீபத்திய மோதல் முன்னேற்றங்கள் மற்றும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், இஸ்லாமாபாத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் அமைதி பேச்சுவார்த்தை, பாகிஸ்தான்-துருக்கி-சவூதி அரேபியா ஒப்பந்தத்திற்குப் பிந்தைய சூழல் மற்றும் ஹூதி அமைப்பினரின் விவகாரங்கள் குறித்தும் ஈரானியத் தலைவர்களுடன் தளபதி முனீர் கலந்தாலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானியப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், கடுமையான பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

ஈரானுக்கு எந்த வகையான ஆதரவையும் வழங்கும் நாடுகள் பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை(Strait of Hormuz) வழியாகச் செல்லும் அனுமதி பெறாத எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால், அப்பகுதியில் கடல்வழி எண்ணெய் போக்குவரத்து முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி