நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹரஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர், ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டது. அரசியல் இலங்கை செய்தி

நீதி அமைச்சர் குறி வைப்பு: நம்பிக்கையில்லாப் பிரேரரணை கையளிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர், ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டது. எதிரணி உறுப்பினர்கள் இணைந்து, சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து பிரேரணையை ஒப்படைத்தனர். 2026 ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட கைதிகள் சிலர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் பலத்த காயமடைந்துள்ளனர். இதன்போது விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது […]

சிறுவர் பாலியல் குற்றவாளி ஒருவருக்கு நற்சான்றிதழ் (Character Reference) வழங்கிய விவகாரத்தில் பல மாதங்களாக எழுந்து வந்த கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மெல்போர்னின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியான விண்டாம் (Wyndham) நகர மேயர் பிரீத் சிங் Preet Singh தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பாலியல் குற்றவாளிக்கு சான்றிதழ் :மெல்போர்ன் மேயர் ராஜினாமா

  • July 21, 2026
  • 0 Comments

சிறுவர் பாலியல் குற்றவாளி ஒருவருக்கு நற்சான்றிதழ் (Character Reference) வழங்கிய விவகாரத்தில் பல மாதங்களாக எழுந்து வந்த கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா மெல்போர்னின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியான விண்டாம் (Wyndham) நகர மேயர் பிரீத் சிங் Preet Singh தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பிரீத் சிங் வெளியிட்ட பதிவு செய்யப்பட்ட உரையில், ” 2024-ஆம் ஆண்டு 15 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காகத் தண்டனை பெற்ற […]

உலகம்

கயானாவில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து – 83 பேர் மாயம்

  • July 21, 2026
  • 0 Comments

கயானாவின் கடற்கரைக்கு அப்பால் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 27 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.வி. பரிமா என்ற பயணிகள் கப்பல் கடந்த சனிக்கிழமை விபத்தில் சிக்கியுள்ளது. குறித்த கப்பலில் பயணித்த 83 பேரை இன்னும் காணவில்லை எனவும் அவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  பிரதமர் மார்க் பிலிப்ஸ்  தெரிவித்துள்ளார். அதேநேரம் கப்பலில் பயணித்த 15 குழந்தைகள் உட்பட 69 பேர் மீட்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் படகில் 179 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது. ஒரு […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் மதப்புக்கூட்டு (வட்) வரியை நீக்குவதாக பிரதமர் அறிவிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) மற்றும் நிதி அமைச்சர் ஜான் ஹீலி ஆகியோர் வீட்டு உபயோக மின்சாரக் கட்டணங்களிலிருந்து மதிப்புக்கூட்டு வரியை (VAT) நீக்குவதாக அறிவித்துள்ளனர். அக்டோபர் 1 முதல் இந்த வரிக்குறைப்பு அமுலுக்கு வரவுள்ளது. இதனால் வாழ்க்கைச் செலவுச் சுமையால் சிரமப்படும் குடும்பங்களுக்குச் சற்று நிம்மதியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த மாற்றத்தால், ஆண்டுதோறும் விதிக்கப்படும் ஆஃப்கெம் (Ofgem) விலை உச்சவரம்பு சுமார் £45 பவுண்ட்ஸ் வரை குறையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. […]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வருகை தந்தால், அவரைப் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்வேன் என்று நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி விடுத்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நெதன்யாகுவை எவராலும் கைது செய்ய முடியாது: நியூயார்க் மேயரின் கருத்துக்கு ட்ரம்ப் பதிலடி

  • July 21, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வருகை தந்தால், அவரைப் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்வேன் என்று நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி விடுத்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் போது பெஞ்சமின் நெதன்யாகு எந்த வகையிலும், எந்தச் சூழலிலும் கைது செய்யப்பட மாட்டார் என்று டிரம்ப் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். திங்கள்கிழமை தனது சமூக வலைத்தளப் பதிவில் டிரம்ப் இந்த உறுதியை அளித்தார். அதில் அவர் மம்தானியின் பெயரைக் நேரடியாகக் […]

உலகம்

வியட்நாமில் தீப்பிடித்து எரிந்த பேருந்து – 07 பயணிகள் உயிரிழப்பு

  • July 21, 2026
  • 0 Comments

தெற்கு வியட்நாமில் இன்று அதிகாலை (21) ஒரு பேருந்து தீப்பிடித்து எரிந்தது. வெளிநாட்டு அறிக்கைகளின்படி, பேருந்தில் இருந்த ஏழு பயணிகள் உயிரிழந்தனர். அந்தப் பேருந்து, லாம் டோங் மாகாணத்திலிருந்து ஹோ சி மின் நகரத்திற்குச் சென்று கொண்டிருந்த 24 இருக்கைகள் கொண்ட பேருந்தாகும். வியட்நாம் காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, தீ பேருந்து முழுவதும் வேகமாகப் பரவி, பல பயணிகளை உள்ளே சிக்க வைத்தது. இதற்கிடையில், இந்த விபத்தில் மேலும் ஐந்து பயணிகள் காயமடைந்தனர், மேலும் தீ விபத்துக்கான […]

13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாகவோ அல்லது சமஷ்டி ஆட்சிமுறையைத் தருவதாகவோ கூறி அல்ல, உண்மையைக் கூறியும் நேர்மையாகச் செயல்பட்டதன் மூலமுமே வடக்கு மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெற்றுள்ளார் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருன ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

நேர்மையான அணுமுறைமூலமே தமிழர்களின் ஆதரவை பெற்றார் ஜனாதிபதி அநுர

  • July 21, 2026
  • 0 Comments

13-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாகவோ அல்லது சமஷ்டி ஆட்சிமுறையைத் தருவதாகவோ கூறி அல்ல, உண்மையைக் கூறியும் நேர்மையாகச் செயல்பட்டதன் மூலமுமே வடக்கு மக்களின் ஆதரவை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெற்றுள்ளார் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருன ஜயசேகர தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும், அது சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் […]

இலங்கை

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்பிக்க தயாராகும் எதிர்கட்சிகள்

  • July 21, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் ஹர்ஷனா நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டாக தொடர்புடைய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். இதற்கிடையில், நாளை மறுநாள் அனைத்து எதிர்க்கட்சிகளும் கூட்டாக ஒரு சிறப்புக் கலந்துரையாடலை நடத்த திட்டமிட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் தொடர்புடைய கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஐரோப்பா

ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர ஐஸ்லாந்து பேச்சுவார்த்தை

  • July 21, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராவதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதால் ஐஸ்லாந்துக்கு “இழப்பதற்கு எதுவும் இல்லை” என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் ( Jean-Noel Barrot) நேற்று தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் சேருவது குறித்து   அந்நாடு பொதுவாக்கெடுப்பு நடத்த தயாராகி வருகின்ற நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பான வாக்கெடுப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்டு ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்குப் பிறகு, ஐஸ்லாந்து மக்கள்   வாக்களிக்க […]

வெலிக்கடை சிறைக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த கந்தசாமி சதீஸ், நேற்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

குட்டிமணி, தங்கத்துரை சிலை திறப்பு விழா: ஏற்பாட்டாளர் கைது

  • July 21, 2026
  • 0 Comments

வெலிக்கடை சிறைக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்த கந்தசாமி சதீஸ், நேற்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் எதிர்வரும் 25 ஆம் திகதி மேற்படி உருவச்சிலைகளைத் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வந்தன. இதன்போது, ஏற்பாட்டுக் குழுவில் ஒருவரான வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் […]