இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் விண்ணப்பிக்க வேண்டும் இலங்கை செய்தி

GSP+ வரிச்சலுகையை தக்கவைக்க 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தடையாக அமையுமா?

  • August 21, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலுள்ள 13 நீதியரசர்களையும் உள்ளடக்கிய முழுமையான நீதியரசர்கள் அமர்வு (Full Bench) முன்னிலையிலேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும் என சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து முதல் 24 மணிநேரத்திற்குள், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. […]

ஆஸ்திரேலியா , சிட்னி விமான நிலையத்தில் தரைப்பகுதியில் (Tarmac) விமானங்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட மேலும் ஒரு குழப்பம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னி விமான நிலைய பாதுகாப்பு கேள்விக்குறி? 3 வாரங்களுக்குள் 4ஆவது அசம்பாவிதம்

  • August 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா , சிட்னி விமான நிலையத்தில் தரைப்பகுதியில் (Tarmac) விமானங்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட மேலும் ஒரு குழப்பம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த மூன்று வாரங்களுக்குள் இடம்பெறும் நான்காவது சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மேல், கோல்ட் கோஸ்ட்டிலிருந்து வந்த குவாண்டாஸ் (Qantas QF589) விமானம் ‘லிமா’ டாக்ஸிவே வழியே சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், மெல்போர்ன் செல்லவிருந்த மற்றொரு குவாண்டாஸ் (QF405) விமானத்திற்கும் அதே டாக்ஸிவேயில் நுழைய விமான […]

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP), ரஷ்ய -ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது வெளிநாட்டுத் தலையீடு (Foreign interference) குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் ரஷ்ய உளவாளி கைது: விசாரணை தீவிரம்

  • August 21, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP), ரஷ்ய -ஆஸ்திரேலிய நபர் ஒருவர் மீது வெளிநாட்டுத் தலையீடு (Foreign interference) குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளனர். 27 வயதான அந்நபர் நேற்று பிரிஸ்பேனின் மேல்பகுதியில் உள்ள சம்னர் (Sumner) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். எனினும், அவர் விக்டோரியா மாநிலத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். திட்டமிட்டு வெளிநாட்டுத் தலையீட்டில் ஈடுபட முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று பிரிஸ்பேன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இது தொடர்பான மேலதிக […]

ஈரான்மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக அந்நாட்டின் திறைசேரிச் செயலாளர் (Treasury Chief) ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது பொருளாதாரத் தடை எச்சரிக்கை: கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

  • August 21, 2026
  • 0 Comments

ஈரான்மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக அந்நாட்டின் திறைசேரிச் செயலாளர் (Treasury Chief) ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) தெரிவித்துள்ளார். இந் நடவடிக்கை புதிய பாரிய இராணுவ நடவடிக்கைகளின் தேவையைக் குறைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானுக்கு “எந்தவொரு வழியிலாவது உயிர்நாடியாகச் செயல்படும்” நாடுகளுக்கு எதிராகப் பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், “பொருளாதாரப் போர்” முன்னெடுக்கப்படும் என்றும் அமெரிக்க அஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, வியாழக்கிழமை ஸ்காட் பெசென்ட் இந்த […]

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (22) சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை செய்தி

நாளை யாழ். செல்கிறார் பிரதமர்: நல்லூர் கோவிலில் வழிபாடு

  • August 21, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (22) சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். பல்கலைக்கழகத்தின் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்றார். இந்நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் (கச்சேரி) நடைபெறவுள்ளது. அதேவேளை, நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், பிரதமர் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடு செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கில் காணிகளை உடன் விடுவிக்கவும்: ஜனாதிபதி உத்தரவு இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் காணிகளை உடன் விடுவிக்கவும்: ஜனாதிபதி உத்தரவு

  • August 20, 2026
  • 0 Comments

கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகள் ஆகியவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு விடுவிப்பதை துரிதப்படுத்துவது தொடர்பாக […]

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை (Framework Agreement) அமு ல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து வத்திக்கான் கவலை வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி

இஸ்ரேல் – லெபனான் ஒப்பந்தம் அமுலாகாமை குறித்து வத்திக்கான் கவலை

  • August 20, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை (Framework Agreement) அமு ல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து வத்திக்கான் கவலை வெளியிட்டுள்ளது. லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் (Joseph Aoun) மற்றும் போப் லியோ (Pope Leo XIV) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பிற்குப் பிறகு வத்திக்கான் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கவலை வெளியிடப்பட்டுள்ளது. ” ஒப்பந்தம் கையெழுத்தானதை வரவேற்ற திருப்பீடம் (Holy See), அதை நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து […]

சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான FIFAவின் தலைவர் ஜியானி இன்பான்டினோவை (Gianni Infantino) பதவியிலிருந்து நீக்கும் வகையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது. செய்தி விளையாட்டு

FIFA தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

  • August 20, 2026
  • 0 Comments

சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான FIFAவின் தலைவர் ஜியானி இன்பான்டினோவை (Gianni Infantino) பதவியிலிருந்து நீக்கும் வகையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது. உலகக் கால்பந்தாட்டத்தின் முக்கிய பிராந்தியக் கூட்டமைப்புகள் இது பற்றி ஆராய்ந்துவருகின்றன என்று மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (UEFA), ஆசிய கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (AFC) , வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்தாட்டக் கூட்டமைப்பு (CONCACAF) ஆகிய முக்கிய அமைப்புகளே இத்தகைய […]

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் பெண் அதிபரொருவர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் தொடர்பில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் பண ஆசைக்காக இக்குற்றத்தைச் செய்த இரு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியா செய்தி

பண ஆசைக்காகப் அதிபர் 27 முறை குத்திக் கொலை: 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கைது

  • August 20, 2026
  • 0 Comments

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியில் பெண் அதிபரொருவர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் தொடர்பில் ஆடம்பர வாழ்க்கை மற்றும் பண ஆசைக்காக இக்குற்றத்தைச் செய்த இரு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொண்டமல்லேபல்லி பகுதியிலுள்ள நாகார்ஜுனா அரசினர் பாடசாலையின் அதிபரும் இயக்குநருமான கல்லு ரூபா ரெட்டி (48) என்பவர், கடந்த ஓகஸ்ட் 12 ஆம் திகதி காலை தனது வீட்டில் 27 கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். ஹைதராபாத்தில் இருந்த அவரது கணவர், தொலைபேசி அழைப்புகளை மனைவி […]

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது. இலங்கை செய்தி

இந்திய தூதுவருடன் சிறீதரன் எம்.பி. சந்திப்பு: அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்வு

  • August 20, 2026
  • 0 Comments

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். இந்தக் கலந்துரையாடலின்போது தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழ் மக்களின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நீண்டகாலமாக இழுபறி நிலையில் உள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதன் அவசியம் […]