செய்தி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு?

  • July 14, 2026
  • 0 Comments

தமிழ் பேசும் கட்சிகளுக்கான பொதுமேடையில் ஏனைய தமிழ் பேசும் கட்சிகளை இணைப்பதற்கு முயற்சி எடுக்கப்படும். அவர்களுடன் பேச்சு நடத்தப்படும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஆறு தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள பொதுமேடைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்வாங்கப்படாமை தொடர்பில் ஊடக சந்திப்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “பொது அமைப்புக்கான முதல் படியே நேற்று எடுக்கப்பட்டது. எனவே, ஏனைய விடயங்கள் பற்றி இனிதான் […]

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிவரை முன்னேறி தாயகம் திரும்பிய நோர்வே அணிக்கு ஒஸ்லோவின் தெருக்களில் 1,00,000-க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர். செய்தி விளையாட்டு

வீழ்ந்தாலும் வீரர்களைக் கொண்டாடிய நோர்வே

  • July 14, 2026
  • 0 Comments

FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிவரை முன்னேறி தாயகம் திரும்பிய நோர்வே அணிக்கு ஒஸ்லோவின் தெருக்களில் 1,00,000-க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பளித்தனர். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் 2-1 என்ற கோல் கணக்கில் கூடுதல் நேரத்தில் (extra-time) தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நோர்வே அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது. இது அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற நோர்வேயின் கனவைச் சிதைத்த போதிலும், இத்தொடரில் தமது நாட்டு […]

ஓமான் கடல் பகுதியில் இந்திய பிரஜையொருவர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஈரானின் துணைத் தூதரான முகமது ஜவாத் ஹொசைனியை நேரில் அழைத்து, தனது கண்டனத்தை இந்திய அரசு பதிவு செய்துள்ளது. இந்தியா செய்தி

ஈரான் தூதுவரை அழைத்து கடும் கண்டனம் வெளியிட்டது இந்தியா

  • July 14, 2026
  • 0 Comments

ஓமான் கடல் பகுதியில் இந்திய பிரஜையொருவர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஈரானின் துணைத் தூதரான முகமது ஜவாத் ஹொசைனியை நேரில் அழைத்து, தனது கண்டனத்தை இந்திய அரசு பதிவு செய்துள்ளது. எண்ணெய் டாங்கர்கள்மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யவே இந்தத் தூதர் நேரில் வரவழைக்கப்பட்டதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய தூதர் இந்திய வெளியுறவு அமைச்சகத்திலிருந்து (MEA) வெளியேறும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஓமான் கடல் பகுதியில் […]

ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று ஈரானின் உயர்மட்ட ராணுவத் தலைமையகமான காத்தம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

வளைகுடாவிலுள்ள அமெரிக்க இலக்குகள்மீது ஈரான் தாக்குதல்

  • July 14, 2026
  • 0 Comments

வளைகுடாப் பகுதியின் பிற இடங்களில், நேற்று இரவு தங்களது எல்லைகளுக்குள் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் நேற்று இரவு மூன்று தனித்தனி எச்சரிக்கைகளை விடுத்து, அங்குள்ள குடியிருப்பாளர்களை உடனடியாக அருகிலுள்ள தங்குமிடங்களை நாடிச் செல்லுமாறு அறிவுறுத்தியது. அதேவேளையில், பஹ்ரைனில் உள்ள பல அமெரிக்க இலக்குகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான ‘இர்னா’ […]

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளின் ஓர் அங்கமாக பொது கட்டமைப்பின்கீழ் செயல்படுவதற்கு ஆறு பிரதான தமிழ் பேசும் கட்சிகள் தீர்மானித்துள்ளது. இலங்கை செய்தி

3 பிரதான நோக்கங்களுக்காகவே தமிழ பேசும் கட்சிகள் ஒன்றிணைவு

  • July 14, 2026
  • 0 Comments

புதிய அரசமைப்பு உருவாக்கம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அழுத்தம் மற்றும் காணி உரிமைக்காகக் குரல் கொடுத்தல் உள்ளிட்ட பிரதான விடயங்களில் ஒருங்கிணைந்து செயல்படவே தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது அரசியல் மற்றும் தேர்தல் கூட்டணி அல்லவெனவும், ஒரு பொது மேடை எனவும் அவர் கூறினார். இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா […]

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்வது குறித்து தமக்கு எந்த பயமும் இல்லை என்று ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் லமீன் யமால் (Lamine Yamal) உறுதியுடன் தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

பிரான்ஸை எதிர்கொள்ள அஞ்சுகிறதா ஸ்பெயின் அணி?

  • July 14, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்வது குறித்து தமக்கு எந்த பயமும் இல்லை என்று ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் லமீன் யமால் (Lamine Yamal) உறுதியுடன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் பெல்ஜியம் அணிக்கு எதிரான கால் இறுதியில் ஸ்பெயின் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஸ்பெயினைக் கண்டு பிரான்ஸ் தான் அச்சப்பட வேண்டும் வேண்டும் என்று பார்சிலோனா கிளப்பின் இளம் வீரரான யமால் கூறியதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பொறுப்பற்று செயல்படும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள்: ஆஸ்திரேலியா குற்றச்சாட்டு

  • July 14, 2026
  • 0 Comments

Apple,Meta,Google உள்ளிட்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், சிறார்கள்மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஆன்லைன் பாலியல் மிரட்டல்களைத் (online sexual extortion) தடுப்பதில் பெரிய குறைபாடுகளைக் கொண்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் இணைய ஒழுங்குமுறை அமைப்பான eSafety செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்துள்ளது. பாலியல் மிரட்டல் விடுபவர்கள் பயன்படுத்தும் பொதுவான மிரட்டல் உத்திகளையும் உரையாடல் வடிவங்களையும் (coercive scripts) கண்டறியக்கூடிய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் இருந்தும், ஆன்லைன் தளங்கள் அவற்றை முறையாகப் பயன்படுத்துவதில்லை என்று eSafety தனது அறிக்கையில் சாடியுள்ளது. “கிரிமினல்கள் தங்களது சேவைகளை […]

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்: மேலும் இரு அதிகாரிகள் மரணம்

  • July 14, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோதல்களில் காயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்ததை அடுத்தே, உயிரிழப்பு எண்ணிக்கை அதிரிகரித்துள்ளது. 25 மற்றும் 39 வயதுடைய அந்த அதிகாரிகள், நேற்று இரவும், இன்று அதிகாலையும் காயங்களால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறைச்சாலை மோதல்களில் உயிரிழந்த சிறை அதிகாரிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை 5 […]

காணாமல்போனோர் தொடர்பாகப் பதிவாகியுள்ள 11,000 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும், செம்மணி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிவதற்குக் அரசாங்கத் தரப்பில் அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஈராண்டுக்குள் நிறைவு

  • July 14, 2026
  • 0 Comments

காணாமல்போனோர் தொடர்பாகப் பதிவாகியுள்ள 11,000 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை அடுத்த இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும், செம்மணி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிவதற்குக் அரசாங்கத் தரப்பில் அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: “தேசிய நல்லிணக்கம் என்பது மிக முக்கியமானது. அதனை ஏற்படுத்துவதற்காக அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி […]

ஐரோப்பா முழுவதும் குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டி, ரஷ்ய சைபர் நெட்வொர்க்குகளை (cyber networks) இலக்காகக் கொண்ட புதிய தடைகளின் தொகுப்பை பிரிட்டன் அறிவித்தது. ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் தடை சட்டவிரோதம்; ரஷ்யா பதிலடி

  • July 14, 2026
  • 0 Comments

ஐரோப்பா முழுவதும் குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டி, ரஷ்ய சைபர் நெட்வொர்க்குகளை (cyber networks) இலக்காகக் கொண்ட புதிய தடைகளின் தொகுப்பை பிரிட்டன் அறிவித்தது. “ரஷ்ய உளவுத்துறை அமைப்புகளுடன் தொடர்புடைய பிராக்சி நெட்வொர்க்குகளில் (proxy networks) ஈடுபட்டுள்ள சைபர் குற்றவாளிகள் உட்பட, அழிவுகரமான சைபர் மற்றும் கலப்பின செயல்பாடுகளுக்குப் (hybrid operations) பின்னால் இருக்கும் 24 தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை இன்றைய நடவடிக்கை இலக்காகக் கொண்டுள்ளது” என்று அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரித்தானியா […]