அமைதி முயற்சியில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு, இருநாடுகளுக்கும் இடையிலான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேம்படுத்த முயல்கின்றன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்கா, ஈரானுக்கிடையில் சுவிட்சர்லாந்தில் நாளை உயர்மட்ட பேச்சு

  • June 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான பேச்சுவார்த்தை நாளை (21) சுவிட்சர்லாந்தின் Burgenstock நகரில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அமைதி முயற்சியில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு, இருநாடுகளுக்கும் இடையிலான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேம்படுத்த முயல்கின்றன. ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் ராணுவம் எச்சரித்ததைத் தொடர்ந்து, பிராந்திய பதற்றத்தைத் தணிக்க இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க துணை ஜனாதிபதி […]

ஹார்முஸ் நீரிணை மீண்டும் முடக்கமா? ஆதாரம் இல்லை என்கிறது அமெரிக்கா உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை மீண்டும் முடக்கமா? ஆதாரம் இல்லை என்கிறது அமெரிக்கா

  • June 20, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை தற்போதும் முழுமையாகத் திறந்திருப்பதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். இந்தப் பாதை வழியாகத் தடையின்றி கப்பல்கள் பயணிப்பதைக் கவனித்து வருவதாகவும், ஈரான் போக்குவரத்தை முடக்கியதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ள நிலையிலேயே, அமெரிக்க துணைஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஒரே நாளில் சுமார் 16 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்பட்டதாக […]

அமெரிக்க துணை ஜனாதிபதி சுவிட்சர்லாந்து செல்லவுள்ளார். அமைதி முயற்சிக்கு அமெரிக்கா தீவிரம் காட்டினாலும், இஸ்ரேலின் விடாபிடியால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உலகம் செய்தி

பதற்றத்துக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து செல்கிறார் அமெரிக்க துணை ஜனாதிபதி

  • June 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்த விவாதங்களை எளிதாக்குவதற்காக அமெரிக்க துணைத் ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் , மிக விரைவில் சுவிட்சர்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்த முக்கியமான ராஜதந்திரப் பயணம் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்று அவர் நேர்காணலொன்றின் போது தெரிவித்துள்ளார். தற்போதைய சர்வதேசச் சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த இந்தச் சந்திப்பு மிக அவசியமானதாகக் கருதப்படுகிறது. எனினும், இத்தகைய பயணங்களை உறுதி செய்வதற்கு முன் பல்வேறு […]

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலக நாடுகளில் கடும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டு, விலையேற்றங்களுக்கு வழிவகுத்தது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உச்சகட்ட பரபரப்பு- ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்

  • June 20, 2026
  • 0 Comments

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் அமெரிக்காவுடனான தங்களின் உடன்படிக்கையை மீறும் செயல் என்று ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது. கப்பல் போக்குவரத்திற்கான மிக முக்கியமான இந்த வழித்தடத்தை மூடுவது ஒரு முதற்கட்ட நடவடிக்கை மட்டுமே என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நீடித்தால், எதிரிகளைத் தங்களின் கடமைகளுக்குப் பணிய வைக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இந்த முடிவானது சர்வதேச அளவில் […]

தமிழக பாஜக தலைவரும் சிறிதரன் எம்.பி. சந்திப்பு இலங்கை செய்தி

தமிழக பாஜக தலைவரும் சிறீதரன் எம்.பி. சந்திப்பு

  • June 20, 2026
  • 0 Comments

மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான குழுவினரை நேற்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது, ஈழத் தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் சமகால அரசியல் சவால்கள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. தாயகத்தில் தமிழர்களின் பூர்வீக இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு, அவ்விடங்களில் திட்டமிட்ட முறையில் பௌத்த விகாரைகள் […]

இலங்கை செய்தி

வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 A சித்தி

  • June 20, 2026
  • 0 Comments

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் (2025) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து 70.1 சதவீதமான மாணவர்கள் உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இம்முறை வெளியான பெறுபேறுகளின்படி, வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘A’ சித்தியைப் பெற்றுள்ளனர். அத்துடன், அகில இலங்கை ரீதியான மாகாண மட்ட அடைவு நிலைகளின் அடிப்படையில், இம்முறை வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 8ஆம் இடத்தைப் பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண […]

நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட் கப்ரியல்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து, சாணக்கியன் எம்.பி. பேச்சு நடத்தினார். இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி விசாரணைக்கு சர்வதேச நிபுணத்துவம் அவசியம்

  • June 20, 2026
  • 0 Comments

” யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், உண்மைகளைக் கண்டறிவதற்கும் சர்வதேச தடயவியல் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அவசியம்.” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் எம்.பி., நோர்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட் கப்ரியல்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து சாணக்கியன் எம்.பி. பேச்சு நடத்தினார். இலங்கையின் […]

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன் நீதி அமைச்சர் யாழில் சந்திப்பு நடத்தினார். இலங்கை செய்தி

காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்தார் நீதி அமைச்சர்

  • June 20, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவுக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று (20) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் முற்பகல் 10.30 மணியளவில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சமூக மட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் முன்வைத்தனர். இந்தச் சந்திப்பின் போது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான அவசர தேவைப்பாடுகள் மற்றும் இந்த விவகாரத்தைக் கையாள்வதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து மிக விரிவாக ஆராயப்பட்டது. இலங்கை […]

இஸ்ரேலின் தாக்குதலையடுத்து தெற்கு லெபனானில் காணப்படும் காட்சி உலகம் செய்தி

லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் குண்டு மழை

  • June 20, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். ஈரான் உடனான அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் தொடர் மோதல்கள் குறித்து வாஷிங்டன் கவலை வெளியிட்டுள்ளது. தற்காப்பு நடவடிக்கையாகவே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தரப்பு கூறினாலும், பிரதமர் நெதன்யாகுவிற்கு ராணுவ நடவடிக்கைகளைத் தொடர உள்நாட்டு அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்தப் போர்ச் சூழலால் லெபனானில் சுமார் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, […]

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர்... உலகம் செய்தி

ஈரான் பறக்கிறார் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்

  • June 20, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி Mohsin Naqvi , ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராகச்சியை சந்திப்பதற்காகத் தெஹ்ரானுக்கு பயணம் மேற்கொள்கின்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உயர்நிலைச் சந்திப்பு குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான நிரந்தர அமைதிக்குரிய ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை எளிதாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த முக்கியப் பயணம் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடுகளுக்கு இடையிலான உறவு […]