லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் குண்டு மழை
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் உடனான அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் தொடர் மோதல்கள் குறித்து வாஷிங்டன் கவலை வெளியிட்டுள்ளது.
தற்காப்பு நடவடிக்கையாகவே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தரப்பு கூறினாலும், பிரதமர் நெதன்யாகுவிற்கு ராணுவ நடவடிக்கைகளைத் தொடர உள்நாட்டு அழுத்தம் அதிகரித்துள்ளது.
இந்தப் போர்ச் சூழலால் லெபனானில் சுமார் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதோடு, பல கிராமங்கள் முழுமையாக உருக்குலைந்துள்ளன.
பதற்றத்தைத் தணிக்கவும் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தவும் அமெரிக்கத் தூதுவர் தற்போது சுவிட்சர்லாந்து விரைந்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்புலத்தில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




