உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்கா, ஈரானுக்கிடையில் சுவிட்சர்லாந்தில் நாளை உயர்மட்ட பேச்சு

அமைதி முயற்சியில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு, இருநாடுகளுக்கும் இடையிலான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேம்படுத்த முயல்கின்றன.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான பேச்சுவார்த்தை நாளை (21) சுவிட்சர்லாந்தின் Burgenstock நகரில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அமைதி முயற்சியில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு, இருநாடுகளுக்கும் இடையிலான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேம்படுத்த முயல்கின்றன.

ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் ராணுவம் எச்சரித்ததைத் தொடர்ந்து, பிராந்திய பதற்றத்தைத் தணிக்க இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பங்கேற்கவிருந்த கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

தற்போது பாகிஸ்தானின் முன்னெடுப்பில் மீண்டும் தொடங்கவுள்ள இந்த பேச்சுவார்த்தை, மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி