உச்சகட்ட பரபரப்பு- ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் அமெரிக்காவுடனான தங்களின் உடன்படிக்கையை மீறும் செயல் என்று ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
கப்பல் போக்குவரத்திற்கான மிக முக்கியமான இந்த வழித்தடத்தை மூடுவது ஒரு முதற்கட்ட நடவடிக்கை மட்டுமே என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நீடித்தால், எதிரிகளைத் தங்களின் கடமைகளுக்குப் பணிய வைக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த முடிவானது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் அமைதி ஒப்பந்தத்துக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டதையடுத்து ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும், லெபனான்மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்வதால் ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.




