இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார். இலங்கை செய்தி

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

  • September 9, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (09) சந்தித்து பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாப்பட்டுள்ளது. இது தொடர்பான இந்திய பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ்தள பதிவு வருமாறு , ” கொழும்பில் இன்று இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் மிகச் சிறந்த முறையில் உயர்மட்டச் சந்திப்பு ஒன்றினை நடத்தினேன். பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் அவருக்கு […]

பிரதமர் நரேந்​திர மோடி​யின் நிகழ்ச்சி வளாகத்​தில் கைத் துப்பாக்கியுடன் நுழைந்தவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்​ளனர். அவர்​களிடம் தீவிர விசா​ரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா செய்தி

பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் துப்பாக்கியுடன் நுழைந்தவர்கள் கைது: விசாரணை தீவிரம்

  • September 9, 2026
  • 0 Comments

பிரதமர் நரேந்​திர மோடி​யின் நிகழ்ச்சி வளாகத்​தில் கைத் துப்பாக்கியுடன் நுழைந்தவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்​ளனர். அவர்​களிடம் தீவிர விசா​ரணை நடத்தப்பட்டு வருகிறது. மகா​ராஷ்டிர தலைநகர் மும்​பை​யில் உள்ள ஜியோ வேர்ல்டு பிளாசா மையத்​தில் சர்​வ​தேச பின்​டெக் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். இந்த சூழலில் கடந்த திங்​கள்​கிழமை ஜியோ வேர்ல்டு பிளாசா வளாகத்துக்கு 24 வயது இளைஞர் ஒரு​வர் சென்​றார். விழா நடைபெறும் மையத்​தின் நுழைவு வாயி​லில் […]

முதலமைச்சர் விஜய், தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தனது முதலாவது அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக நாளை (வியாழக்கிழமை) லண்டன் புறப்படுகிறார். இந்தியா செய்தி தமிழ்நாடு

முதலீடுகளை ஈர்க்க நாளை லண்டன் வருகிறார் முதல்வர் விஜய்

  • September 9, 2026
  • 0 Comments

முதலமைச்சர் விஜய், தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தனது முதலாவது அரசுமுறை வெளிநாட்டுப் பயணமாக நாளை (வியாழக்கிழமை) லண்டன் புறப்படுகிறார். தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுமே இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கமாக அமைகிறது. லண்டனில் நடைபெறும் பல்வேறு முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்குக் உள்ள சாதகமான சூழல்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து […]

சமூக ஊடகங்களின் அல்காரிதம்களைக் (algorithms) கட்டுப்படுத்துவதற்கான கன்பராவின் திட்டங்களை டிரம்ப் விமர்சித்துள்ள நிலையில், அமெரிக்காவுடனான தங்களது உறவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

சமூக ஊடகத் திட்டம்: ஆஸ்திரேலியாவின் நகர்வுக்கு அமெரிக்கா போர்க்கொடி

  • September 9, 2026
  • 0 Comments

சமூக ஊடகங்களின் அல்காரிதம்களைக் (algorithms) கட்டுப்படுத்துவதற்கான கன்பராவின் திட்டங்களை டிரம்ப் விமர்சித்துள்ள நிலையில், அமெரிக்காவுடனான தங்களது உறவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. சமூக ஊடகப் பயனாளர்கள் அல்காரிதம் பரிந்துரைகளில் இருந்து விலகிக் கொள்ளும் (opt out) வாய்ப்பை வழங்கும் வரைவுச் சட்டத்தை ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதன் மூலம் பயனாளர்கள் தங்களது சமூக ஊடகப் பக்கங்களைச் சுயமாக நிர்வகித்துக் கொள்ள முடியும். இந்தச் சட்டத்திற்குப் பணியாத சமூக ஊடக நிறுவனங்களுக்கு […]

ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதேவேளை அமெரிக்கப் படைகள் ஈரானிய கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஈரான் ஜோர்தானில் உள்ள அமெரிக்கத் தளத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய கிழக்குப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தீவிரமடையும் மத்திய கிழக்கு போர்: சவூதிமீதும் தாக்குதல்

  • September 9, 2026
  • 0 Comments

ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதேவேளை அமெரிக்கப் படைகள் ஈரானிய கச்சா எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, ஈரான் ஜோர்தானில் உள்ள அமெரிக்கத் தளத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய கிழக்குப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் இப்போரின் முக்கிய விரிவாக்கமாக, சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள நான்கு நகரங்கள் மீது ஹூதிகள் நடத்திய தாக்குதலில் […]

பாலியல் வன்முறை மற்றும் குடும்பச் சட்ட நீதி அமைப்புகளில் ஆஸ்திரேலியர்கள் இன்னமும் “ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான பாதிப்புகளை” எதிர்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்முறை உச்சம்:வெளியான அதிர்ச்சி தகவல்

  • September 9, 2026
  • 0 Comments

பாலியல் வன்முறை மற்றும் குடும்பச் சட்ட நீதி அமைப்புகளில் ஆஸ்திரேலியர்கள் இன்னமும் “ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான பாதிப்புகளை” எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டின் குடும்ப மற்றும் பாலியல் வன்முறைத் தடுப்பு ஆணையர் மைக்கேலா க்ரோனின் (Micaela Cronin) தனது மூன்றாவது ஆண்டறிக்கையைப் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கங்களும் சமூகங்களும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தேவையான வேகத்திலோ அல்லது அளவிலோ இன்னும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் தரவுகள் பதிவு செய்யப்படத் தொடங்கிய […]

பொறுப்புகூறல் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தேசிய பொறிமுறையைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இலங்கை செய்தி

உள்ளக பொறிமுறையே இலங்கையின் இலக்கு: வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டம்

  • September 9, 2026
  • 0 Comments

பொறுப்புகூறல் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தேசிய பொறிமுறையைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்: “தேசிய பொறிமுறை தற்பொழுது முறைப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு வருகிறது. அத்துடன், காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதுடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எமது […]

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது" என்று அமைச்சரவை பதில் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். இலங்கை செய்தி

இலங்கை, இந்தியாவுக்கிடையில் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • September 9, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது” என்று அமைச்சரவை பதில் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (செப்டம்பர் 09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த […]

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க 26 அமெரிக்கா பறக்கிறார் விஜித ஹேரத் இலங்கை செய்தி

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க 26 அமெரிக்கா பறக்கிறார் விஜித ஹேரத்

  • September 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்கமாட்டார் என்றும், அவருக்குப் பதிலாக இலங்கை சார்பில் அமைச்சர் மட்டத்திலான பிரதிநிதித்துவம் இடம்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (08) தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் தாம் கலந்துகொண்டு, செப்டம்பர் 28 ஆம் திகதி உரையாற்றவுள்ளதாகக் கூறினார். இந்த வருடாந்த ஐ.நா. மாநாட்டில் […]

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கை செய்தி

யாழ். ஆயரை சந்தித்தார் சிறிதரன் எம்.பி: தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வு

  • September 8, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதியை நிலைநாட்டுதல் மற்றும் அதற்கான சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீட்டைப் பெறுதல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. மேலும், மனித உரிமைகளுக்குப் புறம்பான பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதனால் தமிழ் இளைஞர்களும் மக்களும் எதிர்கொள்ளும் […]