சிரியாவில் ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து – 14 பேர் பலி
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள சர்மடா நகருக்கு அருகே, ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்ட பகுதியில் இன்று வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
போரின் எஞ்சிய பாகங்களைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக இடத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த பணியாளர்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




