இலங்கை செய்தி

உள்ளக பொறிமுறையே இலங்கையின் இலக்கு: வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டம்

பொறுப்புகூறல் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தேசிய பொறிமுறையைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பொறுப்புகூறல் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தேசிய பொறிமுறையைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:

“தேசிய பொறிமுறை தற்பொழுது முறைப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு வருகிறது. அத்துடன், காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதுடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் இனவாத மற்றும் மதவாதப் பிரச்சினைகள் எதுவும் இடம்பெறவில்லை” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை