03 ஆம் உலகப் போர் தொடர்பில் தெஹ்ரான் எச்சரிக்கை
அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்து வருவதாலும், ரஷ்யா-உக்ரைன் மோதல் விரிவடைந்து வருவதாலும், உலகம் “நடைமுறையில் மூன்றாம் உலகப் போரின் விளிம்பில்” இருப்பதாக தெஹ்ரான் நாடாளுமன்ற உறுப்பினர் கம்ரான் கசன்ஃபாரி Kamran Ghazanfari எச்சரித்துள்ளார்.
ஓமான் வளைகுடாவிலும் கார்க் தீவுக்கு அருகிலும் ஐந்து ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்க இராணுவம் அழித்த பிறகு இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
இதற்கிடையே ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபிய நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தி, பிராந்திய மோதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதில் குறைந்தது 73 பேர் காயமடைந்ததோடு, எரிசக்தி ஆலைகளும் செயலிழந்துள்ளன.
அத்துடன் ஹூதி தாக்குதல்களுக்கு உறுதியான பதிலடி கொடுப்பதாக சவூதி தலைமையிலான கூட்டணி உறுதியளித்துள்ளது.
இராஜதந்திர வழிமுறைகள் முடங்கியுள்ள நிலையில், இது மோதல் மேலும் பரவுவதற்கான அறிகுறியாக உள்ளது.




