ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு அமெரிக்க பொதுமக்கள் எதிரானவர்கள் அல்லர் என சுட்டிக்காட்டியுள்ளார்.  உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்கர்கள் போரை எதிர்க்கவில்லை: ஈரான்மீதான தாக்குதல் தொடரும்

  • July 22, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு அமெரிக்க பொதுமக்கள் எதிரானவர்கள் அல்லர் என சுட்டிக்காட்டியுள்ளார். “அவர்கள் (ஈரான்) கடுமையான விலையைக் கொடுக்கப் போகிறார்கள், அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகிறார்கள்” எனவும் டிரம்ப் கூறினார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் தொடர்பில் மக்கள் ஆதரவு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு டிரம்ப் பதிலளிக்கையில், “உண்மையில், அமெரிக்கர்கள் இந்த போருக்கு எதிரானவர்கள் அல்லர் ” எனக் குறிப்பிட்டார். எனினும், கடந்த […]

ஈரான்மீது கடந்த ஜூன் 27 முதல்அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 3 குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் செய்தி

போர் மரண எண்ணிக்கையை இன்று வெளியிட்டது ஈரான்

  • July 22, 2026
  • 0 Comments

ஈரான்மீது கடந்த ஜூன் 27 முதல்அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் 3 குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், உட்கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, கடந்த பெப்ரவரி பிற்பகுதியில் போர் தொடங்கியதில் இருந்து, இதுவரை குறைந்தபட்சம் 18 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் . நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று அமெரிக்க மத்திய கட்டளைக் பீடம் (US Central Command) தெரிவித்துள்ளது.

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதை அமெரிக்காவில் மட்டும் சுமார் 6.3 கோடி (63 மில்லியன்) பேர் கண்டுகளித்துள்ளனர். செய்தி விளையாட்டு

சூப்பர் ஹிட் உலகக்கோப்பை: அமெரிக்காவில் புதிய சாதனை

  • July 22, 2026
  • 0 Comments

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றதை அமெரிக்காவில் மட்டும் சுமார் 6.3 கோடி (63 மில்லியன்) பேர் கண்டுகளித்துள்ளனர். இது முந்தைய பார்வைகளின் சாதனைகளைத் தகர்த்தெறிந்துள்ளதுடன், பல தசாப்த கால முயற்சிகளுக்குப் பிறகு அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டிற்கான வரவேற்பு எந்த அளவிற்குப் பெருகியுள்ளது என்பதையும் உணர்த்தியுள்ளது. நியூஜெர்சியில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இரு அணிகளும் கோல் எதும் அடிக்காத நிலையில், கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் […]

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

சர்வதேச விசாரணையை வலியுறுத்திய வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

  • July 22, 2026
  • 0 Comments

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூது குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். அதன் போது , தூதுக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் முகமாக […]

பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமான BAE சிஸ்டம்ஸ் மற்றும் உக்ரைனின் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளர் நிறுவனம், உக்ரைனில் இலகுரக பீரங்கி அமைப்புகளை உற்பத்தி செய்வதற்கான உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஐரோப்பா செய்தி

பிரிட்டிஷ் L119 பீரங்கி அமைப்புகளை உற்பத்தி செய்யப் போகும் உக்ரைன்

  • July 22, 2026
  • 0 Comments

பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமான BAE சிஸ்டம்ஸ் மற்றும் உக்ரைனின் ஒரு முக்கிய பாதுகாப்பு கூட்டாளர் நிறுவனம், உக்ரைனில் இலகுரக பீரங்கி அமைப்புகளை உற்பத்தி செய்வதற்கான உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. “உக்ரைன் ஆயுதப் படைகளின் பயன்பாட்டிற்காக எல்119 இலகுரக துப்பாக்கியின் ஒரு வகையை உருவாக்குவதற்கு இந்த மூலோபாய கூட்டாண்மை ஆதரவளிக்கும்,” என்று ஃபார்ன்பரோ சர்வதேச விமானக் கண்காட்சியைத் தொடர்ந்து BAE சிஸ்டம்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள உக்ரேனிய பாதுகாப்பு நிறுவனம் அடையாளம் காணப்படவில்லை. இந்த ஆவணம், […]

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய எல்லை நிர்ணய முறை, மேம்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், பிரித்தானிய மக்கள் கடவுச்சீட்டுச் சோதனையைக் கடந்து செல்ல எடுக்கும் நேரத்தை ஏறக்குறைய மும்மடங்கு ஆக்கியுள்ளது. ஐரோப்பா செய்தி

பிரித்தானியர்கள் கடவுச்சீட்டுச் சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல எடுக்கும் நேரம் மும்மடங்கு அதிகரிப்பு

  • July 22, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய எல்லை நிர்ணய முறை, மேம்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், பிரித்தானிய மக்கள் கடவுச்சீட்டுச் சோதனையைக் கடந்து செல்ல எடுக்கும் நேரத்தை ஏறக்குறைய மும்மடங்கு ஆக்கியுள்ளது. ரோமில் உள்ள மத்திய விமான நிலையத்தின் அதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தியதோடு, தனது கவலையையும் வெளிப்படுத்தினார். கோடைக்காலத்தில் ஐரோப்பாவிற்குப் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கத் தயாராக இருக்குமாறு ரயன்ஏர் நிறுவனம் எச்சரித்துள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய விமான நிலையங்களில் தடைகள் நீடிப்பதாக ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது, […]

இந்து மதத்தின்படி, காலம் நான்கு யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: சத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம். தற்போதைய யுகம் கலியுகம் ஆகும், இதை சிலர் கலியுகம் என்றும் அழைக்கின்றனர். கருத்து & பகுப்பாய்வு

கலியுகத்தின் முடிவு நெருங்கிவிட்டதா? கல்கி புராணத்தில் மறைந்துள்ள இரகசியம்

  • July 22, 2026
  • 0 Comments

இந்து மதத்தின்படி, காலம் நான்கு யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: சத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலியுகம். தற்போதைய யுகம் கலியுகம் ஆகும், இதை சிலர் கலியுகம் என்றும் அழைக்கின்றனர். கலியுகம் மிகவும் சவாலான யுகமாகக் கருதப்படுகிறது. சாஸ்திரங்களில் இதன் மொத்தக் காலம் 432,000 ஆண்டுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, இதில் ஏறக்குறைய 5,000 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதாவது நாம் தற்போது அதன் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறோம். முன்னணி ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்தக் காலகட்டம் கலியுகத்தின் பொற்காலமாகும். […]

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டுறிந்து மகஜரையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை செய்தி

ஐரோப்பிய தூதுக்குழுவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மகஜர் கையளிப்பு

  • July 22, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டுறிந்து மகஜரையும் பெற்றுக்கொண்டனர். யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, இன்று புதன்கிழமை முற்பகல் 9 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து […]

யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட 8 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் இன்று புதன்கிழமை நேரில் பார்வையிட்டனர். இலங்கை செய்தி

ஐரோப்பிய தூதுக்குழு செம்மணியில் ஒரு மணிநேரம் அவதானிப்பு

  • July 22, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து நாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட 8 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் இன்று புதன்கிழமை நேரில் பார்வையிட்டனர். செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியை ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் நேரில் பார்வையிட அனுமதி கோரி, கடந்த வெள்ளிக்கிழமை காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்தரணி ஊடாக […]

தெற்கு லெபனானில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தால் மட்டுமே ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களைக் களைவது சாத்தியமாகும் என்று லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் (Joseph Aoun) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டுங்கள்: அமெரிக்க மண்ணில் லெபனான் ஜனாதிபதி முழக்கம்

  • July 22, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தால் மட்டுமே ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களைக் களைவது சாத்தியமாகும் என்று லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் (Joseph Aoun) தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மற்றும் அவரது தூதுக்குழுவினரைக் கெளரவிக்கும் வகையில், அமெரிக்காவிற்கான லெபனான் தூதர் நாதா ஹமாதே மொஅவாத் (Nada Hamadeh Moawad) வாஷிங்டன் டி.சி.யில் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவ்ன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமெரிக்க நாடாளுமன்ற (காங்கிரஸ்) உறுப்பினர்கள் […]