கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மிக வேக பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,031 ஆக உயர்ந்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கொங்கோவில் அதிவேகமாகப் பரவும் எபோலா: பலி எண்ணிக்கை 1,000-ஐக் கடந்து தீவிர ஆபத்து

  • July 23, 2026
  • 0 Comments

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மிக வேக பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,031 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை வரலாற்றில் பதிவான எபோலா பரவல்களிலேயே இதுவே மிக வேகமாகப் பரவும் நோய்த்தொற்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கானாவில் நடைபெற்ற சுகாதார மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (Africa CDC) இயக்குநர் ஜெனரல் ஜீன் கசேயா (Jean Kaseya), மே மாதம் ‘புண்டிக்புக்யோ’ (Bundibugyo) வகை எபோலா வைரஸ் […]

ஜப்பான் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் தான் மிகக் குறைந்த நேரமே தூங்குவதாகப் பிரதமர் சனே தகைச்சி (Sanae Takaichi) வெளியிட்ட தகவல், அந்நாட்டு மக்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உலகம் செய்தி

இரவில் 3 மணிநேரம் மட்டுமே தூக்கம்: ஜப்பான் ஜப்பான் பிரதமரின் பதிவால் சர்ச்சை

  • July 23, 2026
  • 0 Comments

ஜப்பான் பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் தான் மிகக் குறைந்த நேரமே தூங்குவதாகப் பிரதமர் சனே தகைச்சி (Sanae Takaichi) வெளியிட்ட தகவல், அந்நாட்டு மக்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொது விடுமுறை வார இறுதியில் தனது நேரத்தை எப்படிச் செலவிட்டார் என்பது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட பிரதமர், “நீண்ட நாட்களுக்குப் பிறகு முதன்முறையாகத் தொடர்ந்து 5 மணி நேரம் முழுமையாகத் தூங்கினேன்” என்று எழுதியிருந்தார். வழக்கமாகத் தாம் ஒரு இரவில் 3 மணி […]

"பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அச்சட்டம் நீக்கப்படும். அதேபோல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் (தமிழ் அரசியல் கைதிகள்) பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாட முடியும்" என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பிரதான தமிழ்க் கட்சிகள் எதிர்ப்பு

  • July 23, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) நடைபெறவுள்ளன. சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடத்தப்படவுள்ளது. அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும். நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்கட்சிகளால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை […]

ஜனநாயகன் வெற்றிபெற ரசிகர்கள் வழிபாடு: திரையரங்குகளுக்கு ஓடும் அமைச்சர் செய்தி பொழுதுபோக்கு

ஜனநாயகன் வெற்றிபெற ரசிகர்கள் வழிபாடு: திரையரங்குகளுக்கு ஓடும் அமைச்சர்

  • July 23, 2026
  • 0 Comments

பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என ஆசிவேண்டி, தமிழ்நாடு சிதம்பரம் பகுதியிலுள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நேற்று கோயிலில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். திரைப்படம் எந்தவித தடங்கலுமின்றி வெற்றிகரமாக ஓட வேண்டும் என்பதற்காக, ரசிகர்கள் கோயிலில் முட்டிபோட்டு நகர்ந்து சென்று பிரார்த்தனை செய்ததுடன், மண்சோறு சாப்பிட்டும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி […]

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி கட்​சி​யினர் சிஜேபி (CJP) கட்சியினர் கடந்த ஜூன் 28-ஆம் திகதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா செய்தி

போராட்டக்காரர்கள் எச்சரிக்கை: டெல்லியில் துணை ராணுவம் குவிப்பு

  • July 23, 2026
  • 0 Comments

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி கட்​சி​யினர் சிஜேபி (CJP) கட்சியினர் கடந்த ஜூன் 28-ஆம் திகதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20-ஆம் திகதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டக்காரர்களும் பொலிஸார் மீது கல்வீசித் […]

அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் சிவில் அணுசக்தி தொடர்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக அமெரிக்க எரிசக்தி திணைக்களம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

யுரேனியத்தைச் செறிவூட்ட சவூதிக்கு அமெரிக்கா அனுமதி: எதிர்ப்புகளுக்கு மத்தியில் எட்டப்பட்ட ஒப்பந்தம்

  • July 23, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் சிவில் அணுசக்தி தொடர்பில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக அமெரிக்க எரிசக்தி திணைக்களம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அணு உலைகளைக் கட்டுவதற்கும், யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கும் சவூதி அரேபியாவிற்கு அனுமதி கிடைக்கிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது நிர்வாகக் காலம் மற்றும் ஜோ பைடனின் ஆட்சிக் காலம் எனப் பல ஆண்டுகளாக சவூதியுடனான இந்த சிவில் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்று […]

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் 'அரசியல் கைதி' என்ற பதத்துக்கு எத்தகைய பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

‘அரசியல் கைதிகள்’ என்று எவரும் சிறையில் இல்லை: நீதி அமைச்சர் சர்ச்சை கருத்து

  • July 23, 2026
  • 0 Comments

சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் ‘அரசியல் கைதி’ என்ற பதத்துக்கு எத்தகைய பொருள்கோடலும் வழங்கப்படவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமர்வில், வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறைச்சாலை […]

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சிறார் பாலியல் சுரண்டல் சார்ந்த காட்சிப் பொருட்களை உருவாக்கிய மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காக நபர் ஒருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொடூரச் செயல்: ஆஸ்திரேலிய இளைஞன் கைது

  • July 23, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சிறார் பாலியல் சுரண்டல் சார்ந்த காட்சிப் பொருட்களை உருவாக்கிய மற்றும் வைத்திருந்த குற்றத்திற்காக நபர் ஒருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தெற்கு ஆஸ்திரேலியா பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ சிறுவர்கள் சுரண்டல் எதிர்ப்புப் பிரிவு’ (Joint Anti Child Exploitation Team) புலனாய்வாளர்கள், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் (Adelaide) வடக்கு புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரை நேற்று கைது செய்ததாகத் தெரிவித்துள்ளனர். […]

செம்மணியில் இதுவரை 471 எலும்புக் கூடுகள் அடையாளம்: 455 அகழ்ந்தெடுப்பு இலங்கை செய்தி

செம்மணியில் இதுவரை 471 எலும்புக் கூடுகள் அடையாளம்: 455 அகழ்ந்தெடுப்பு

  • July 23, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று புதன்கிழமை புதிதாக 4 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவற்றில் 11 என்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்கள் என இதுவரையில் 94 நாள்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 471 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் 455 என்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் […]

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு அமெரிக்க பொதுமக்கள் எதிரானவர்கள் அல்லர் என சுட்டிக்காட்டியுள்ளார்.  உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்கர்கள் போரை எதிர்க்கவில்லை: ஈரான்மீதான தாக்குதல் தொடரும்

  • July 22, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான்மீது தொடுக்கப்பட்டுள்ள போருக்கு அமெரிக்க பொதுமக்கள் எதிரானவர்கள் அல்லர் என சுட்டிக்காட்டியுள்ளார். “அவர்கள் (ஈரான்) கடுமையான விலையைக் கொடுக்கப் போகிறார்கள், அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருகிறார்கள்” எனவும் டிரம்ப் கூறினார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் தொடர்பில் மக்கள் ஆதரவு குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு டிரம்ப் பதிலளிக்கையில், “உண்மையில், அமெரிக்கர்கள் இந்த போருக்கு எதிரானவர்கள் அல்லர் ” எனக் குறிப்பிட்டார். எனினும், கடந்த […]