பிரான்ஸில் வெப்ப அலையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் பதிவு
பிரான்ஸில் கடந்த ஜுலை மாதம் நிலவிய வெப்ப அலை காரணமாக 1,243 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று இந்த தகவலை அறிவித்தது.
ஜுலை 3 முதல் ஜூலை 22 வரையிலான காலகட்டத்தில், இந்த இறப்புகள் பதிவாகியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த ஆண்டை தாக்கிய கோடைக்கால வெப்ப அலைக் காரணமாக பிரான்ஸில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





