ஐரோப்பா

பிரான்ஸில் பாதசாரிகள் மீது வேண்டுமென்றே மோதிய கார் – 07 பேர் கவலைக்கிடம்

பிரான்சின் கேன் Caen நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பாதசாரிகள் கடவையில் கார் ஒன்று வேண்டுமென்றே மக்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களின் ஏழு பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

அவரது நோக்கம் இன்னும் தெரியவில்லை என்றும் சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்