ஐரோப்பா

பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – 500 பேர் கைது

பிரான்ஸில் காட்டுத்தீயை மூட்டியதாக சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் வேண்டுமென்றே தீ மூட்டியதாகவும், மீதமுள்ளவர்கள் தற்செயலாக அவ்வாறு செய்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறார்கள்.

ஜூலை மாதம் போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை குரோஷியாவின் விடுமுறைத் தளமொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்ட நிலையில், 40 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 1,200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், கண்டம் முழுவதும் “மிகவும் தீவிரமான” காட்டுத்தீ நிலைமைகள் பரவியிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

மேலும் ஜெர்மனி மற்றும் தென்மேற்கு பிரான்சில் உள்ள கிராமங்களிலிருந்து மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

பெல்ஜியத்தின் மிகப்பெரிய இயற்கை காப்பகமான ஹை ஃபென்ஸில், தீ பரவிய நிலையில், லீஜ் மாகாணத்தில் வசிப்பவர்கள் நேற்று வெளியேற்றப்பட்டனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்