பிரான்ஸில் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து 04 ஓவியங்கள் திருட்டு
பிரான்ஸின் ரிவியேராவில் கேன்ஸ்-சுர்-மெர் Cagnes-sur-Mer நகரில் உள்ள ரெனோயர் Renoir அருங்காட்சியகத்தில் இருந்து, நான்கு ஓவியங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர்களை கைது செய்ய துரத்திச் சென்றுள்ளனர்.
இதன்போது கொள்ளையர்கள் வசம் இருந்த ஒரு ஓவியம் கீழே விழுந்ததாகவும், ஏனைய மூன்று ஓவியங்களுடன் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொள்ளையர்களை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




