உலகம்

செம்பு மற்றும் கோபால்ட் தாதுக்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்தது காங்கோ

  • August 6, 2026
  • 0 Comments

காங்கோ செம்பு மற்றும் கோபால்ட் தாதுக்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. கனிம வளங்களிலிருந்து அதிக மதிப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், உள்நாட்டிலேயே பதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சுரங்கத்துறை அமைச்சர் லூயிஸ் கபாம்பா வாடும் (Louis Kabamba Watum), வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஜூலியன் பலுகு கஹோங்கியா (Julien Paluku Kahongya) மற்றும் பொருளாதார அமைச்சர் டேனியல் முகோகோ சாம்பா (Daniel Mukoko Samba) ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட அரசாணை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

காங்கோவிற்கு பயணித்த வெளிநாட்டினர் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு

  • July 19, 2026
  • 0 Comments

எபோலா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக காங்கோவிற்குச் சென்ற எந்தவொரு வெளிநாட்டவரும் கனடாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய அரசாங்கம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 21 நாட்களில் காங்கோவில் இருந்த வெளிநாட்டுப் பிரஜைகளின் நுழைவைக் கட்டுப்படுத்துவது, கனடியர்களுக்கான பொது சுகாதார அபாயங்களைக் குறைக்கக்கூடும்” என்று கூறியுள்ளது. இந்த நடவடிக்கைகள், ஜூலை 20, முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது   எபோலா பரவலைக் கட்டுப்படுத்த […]

உலகம்

காங்கோவில் மேலும் இரு மாகாணங்களிலும் பரவி வரும் எபோலா தொற்று

  • July 9, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நோய் தொற்றானது விரிவடைந்து வருவதை உணர்த்தும் வகையில் புதிய மாகாணமொன்றில் நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மே 15 அன்று அறிவிக்கப்பட்ட இந்த நோய்ப் பரவலானது, இடுரி, வடக்கு கிவு மற்றும் தெற்கு கிவு ஆகிய கிழக்கு மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  அங்கு 1,759 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சோபோ (Tshopo) மாகாணத்தின் தலைநகரமும் […]

உலகம்

எபோலா வைரஸ் – காங்கோவில் 75 சுகாதாரப் பணியாளர்கள் பாதிப்பு

  • June 19, 2026
  • 0 Comments

காங்கோ குடியரசில் எபோலா நோய் பரவல் தொடங்கியதிலிருந்து 75 சுகாதாரப் பணியாளர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எபோலா நோய் தொற்று குறித்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னமே நோய் தொற்று பரவியிருக்கலாம் எனத் அதிகாரிகள்  சந்தேகிக்கின்றனர். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையிலும்கூட, கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் போன்ற அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். உலக சுகாதார அமைப்பின்படி, உலகில் மிகக் குறைந்த சுகாதாரப் பணியாளர் விகிதங்களைக் கொண்ட […]

உலகம்

காங்கோவில் விமான நிலையம் திறப்பு – பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

  • June 2, 2026
  • 0 Comments

எபோலா நோய் பரவல் காரணமாக மூடப்பட்ட விமான நிலையத்தை காங்கோ ஜனநாயகக் குடியரசு மீண்டும் திறந்துள்ளது. இடுரி மாகாணத்தின் முக்கிய விமான நிலையமான புனியா விமான நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீள திறக்கப்பட்டுள்ளது. குறித்த விமான நிலையம் மனிதாபிமான பொருட்கள் மற்றம் மருத்துவ பொருட்களை கொண்டு செல்ல திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை படிப்படியாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் தொடங்க” தற்போது நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீளவும் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிக்க […]

உலகம்

காங்கோவில் எபோலா மரணங்களின் எண்ணிக்கை உயர்வு!

  • May 30, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பில்  உலக சுகாதார அமைப்பு  வெளியிட்டுள்ள தகவலில்,  எபோலா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 906 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. உகாண்டாவிலும் ஒன்பது எபோலா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

எபோலா அச்சம் : காங்கோவுடனான எல்லையை மூடும் உகாண்டா!

  • May 28, 2026
  • 0 Comments

எபோலா வைரஸ் தொற்று பரவல் காரணமாக காங்கோ ஜனநாயகக் குடியரசுடனான தனது எல்லையை உடனடியாக மூடுமாறு உகாண்டா அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். காங்கோ நோயாளிகளிடமிருந்து வைரஸால் பாதிக்கப்பட்ட உகாண்டா சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி ஜெஸ்கா அலுபோ (Jesca Alupo)  தலைமையிலான உள்ளூர் எபோலா பணிக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. இருப்பினும் இதுபோன்ற எல்லை மூடுதல்கள் பொதுவாக அச்சத்தின் காரணமாகவே செயல்படுத்தப்படுகின்றன, அவற்றுக்கு அறிவியல் அடிப்படை இல்லை என உலக […]

உலகம்

காங்கோ, உகாண்டாவில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும் தாய்லாந்து!

  • May 25, 2026
  • 0 Comments

தாய்லாந்து அரசாங்கம் காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பரிசோதனை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக அறிகுறியற்ற பயணிகளுக்கு 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலையும் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இல்லாத எபோலாவின் புண்டிபுக்யோ வகையை,    உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக WHO  அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. WHOவின் அறிப்பை தொடர்ந்து தாய்லாந்தின் நோய்க் கட்டுப்பாட்டுத் துறை, காங்கோ மற்றும் உகாண்டாவை எபோலா பாதிப்பு மண்டலங்களாக வகைப்படுத்தியுள்ளது. மேலும், ஒரு […]

உலகம்

காங்கோவில் எபோலா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த கூடாரங்களுக்கு தீ வைப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

காங்கோவில் எபோலா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வந்த கூடாரம் ஒன்று நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து அங்கு சிகிச்சைப் பெற்று வந்த 18 நோயாளிகள் வெளியேறியுள்ளனர். நோயாளிகள் சிகிச்சைப் பெறும் கூடாரங்கள் தீக்கிரையாக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். அதிக தொற்றுத்தன்மை கொண்ட எபோலா நோயாளிகளின் உடல்களைக் கையாள்வதற்கான கடுமையான நெறிமுறைகள் காரணமாக, சுகாதாரப் பணியாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்களும் அரங்கேறி […]

உலகம்

காங்கோவில் வசிக்கும் அமெரிக்கர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை!

  • May 18, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா நோய் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், அங்கிருக்கும் அமெரிக்கர்களை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைக்கு  நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) ஆதரவளித்து வருகிறன. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள பல அமெரிக்கர்கள், சந்தேகிக்கப்படும் எபோலா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் . அவர்களில் சிலர் அதிக ஆபத்துள்ளவர்களாகக் கருதப்படுவதுடன்,  குறைந்தபட்சம் ஒருவருக்காவது  அறிகுறிகள் தென்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]