காங்கோவில் மேலும் இரு மாகாணங்களிலும் பரவி வரும் எபோலா தொற்று
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த நோய் தொற்றானது விரிவடைந்து வருவதை உணர்த்தும் வகையில் புதிய மாகாணமொன்றில் நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மே 15 அன்று அறிவிக்கப்பட்ட இந்த நோய்ப் பரவலானது, இடுரி, வடக்கு கிவு மற்றும் தெற்கு கிவு ஆகிய கிழக்கு மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 1,759 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், சோபோ (Tshopo) மாகாணத்தின் தலைநகரமும் காங்கோவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கிசாங்கானியில் (Kisangani) பதிவான தொற்று விபரங்கள் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது குறித்த இரு பகுதிகளில் தொற்று பாதிப்புக்கு உள்ளான பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது இவ்விரு மாகாணங்களில் தீவிர பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




