யாழ். தீவக மனிதப் புதைகுழி: நிதி ஒதுக்கீடு செய்யத் தயார் என OMP அறிவிப்பு
யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வடக்கிலுள்ள ஐந்து இடங்களில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டு நியாயமான விசாரணை நடத்துமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கு, நேற்றைய தினம் (ஜூலை 28) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. […]













