ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் மீள ஆரம்பம்
ரஷ்யாவின் அஸூர் ஏர் நிறுவனம், ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது.
நவம்பர் மாதம் முதல் விமான சேவைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அஸூர் ஏர் அறிவித்துள்ளது.
அதன்படி, ரஷ்யாவில் உள்ள 5 விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கு தனது விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அஸூர் ஏர் நிறுவனத்துடன், ஏரோஃப்ளோட் மற்றும் எஸ்-7 ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்க உள்ளன.
இதற்கிடையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிட்டிஷ் ஏர்வேஸ் அடுத்த மாதம் முதல் இலங்கைக்கும் இங்கிலாந்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்க உள்ளது.
மேலும், பிரிட்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் அக்டோபர் 23 முதல் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




