பசுபிக் தீவு பாதுகாப்புக்காக புதிய திட்டம் முன்வைப்பு!
சாலமன் தீவுகளின் புதிய பிரதமர் மேத்யூ வேல், பசிபிக் பிராந்தியத்திற்கான ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளார். இந்த நடவடிக்கை இப்பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க மூலோபாய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசிபிக் தீவுகளின் கூட்டமைப்பிற்கு (PIF) தலைவராகவும் இருக்கும் மேத்யூ வேல் , ஜூன் மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸை சந்தித்தபோது இந்த யோசனையை முன்மொழிந்துள்ளார் என தெரியவருகின்றது. பிரதமராகப் பதவியேற்றது முதலே மேத்யூ வேல் , ஆஸ்திரேலியாவை நோக்கி ஒரு கூர்மையான மாற்றத்தை […]













