இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இலங்கை செய்தி

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க இலங்கையில் புதிய நகர்வு

  • August 10, 2026
  • 0 Comments

இலங்கையில் சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது. சிறைச்சாலைகள் திணைக்களம், சமுதாயம் சார் சீர்திருத்தத் திணைக்களம், புனர்வாழ்வுப் பணியகம், தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய அரசாங்க […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட ககலவரத்தின்போது ஏற்பட்ட சொத்துச் சேதங்களின் மதிப்பு 100 மில்லியன் ரூபாயைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. செய்தி

நீர்கொழும்பு சிறை மோதல்: ரூ. 10 கோடி மேல் இழப்பு

  • August 10, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட ககலவரத்தின்போது ஏற்பட்ட சொத்துச் சேதங்களின் மதிப்பு 100 மில்லியன் ரூபாயைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 05ஆம் திகதி நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலின் போது, சிறைச்சாலையின் கட்டடங்கள், சொத்துக்கள் மற்றும் கைதிகளின் முக்கிய பதிவு ஆவணங்களுக்குக் பலத்த சேதம் விளைவிக்கப்பட்டது. இக்கொடூரச் சம்பவத்தில் 32 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2,400 கைதிகள் வரை தடுத்து […]

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பவெவ காட்டுப்பகுதியில் சொகுசு கார் ஒன்றை நிறுத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்ய மொரவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கை செய்தி

போதைப்பொருள் கடத்தப்பட்ட சொகுசு கார் மீட்பு: தப்பியோடிய கும்பலுக்கு வலை

  • August 10, 2026
  • 0 Comments

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பவெவ காட்டுப்பகுதியில் சொகுசு கார் ஒன்றை நிறுத்திவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்ய மொரவெவ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (09) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. திருகோணமலைப் பகுதியில் இருந்து சொகுசு கார் ஒன்றில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு, குறித்த சொகுசு காரை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர். எனினும், பொலிஸாரின் […]

கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்  பாதாள குழு உறுப்பினரான  கஞ்சிபானி இம்ரானின்  நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை செய்தி

பாதாளகுழு உறுப்பினர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொலை

  • August 10, 2026
  • 0 Comments

கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்  பாதாள குழு உறுப்பினரான  கஞ்சிபானி இம்ரானின்  நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை, சங்கராஜ மாவத்தை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத நபர்கள், குறித்த நபரை இலக்கு வைத்துத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த நபர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காணவும், அவர்களைக் கைது செய்யவும் கொழும்பு குற்றப் […]

இராணுவக் கட்டமைப்புக்கள், இராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் இலக்காகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடகொரிய ஹேக்கர்கள் தீவிர சைபர் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் தாக்குதல்: வடகொரியாவின் புது வியூகம்

  • August 10, 2026
  • 0 Comments

இராணுவக் கட்டமைப்புக்கள், இராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் இலக்காகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடகொரிய ஹேக்கர்கள் தீவிர சைபர் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கொரியாவின் பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான ‘ஜெனியன்ஸ்’ (Genians) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. வடகொரிய உளவுத்துறையுடன் தொடர்புடைய ‘கிம்சுகி’ (Kimsuky) எனும் சர்வதேச ஹேக்கிங் குழு, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் போலி […]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. அரசியல் இலங்கை செய்தி

வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நேரடியாகத் தலையிடுவேன்: சஜித் உறுதி

  • August 10, 2026
  • 0 Comments

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் கண்டறிவதே இச்சந்திப்பின் முதன்மை நோக்கமாக அமைந்திருந்தது. இச்சந்திப்பின்போது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்துக் விரிவாகக் கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அப்பிரச்சினைகளுக்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் சாத்தியமான […]

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபா வழங்கும் (Mukhyamantri Majhi Ladki Bahin Yojana) திட்டம், கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் நிதிச் சுதந்திரத்திற்கு முக்கிய காரணியாக அமைந்த போதிலும், தற்போது கடும் நிதித் தணிக்கை மற்றும் முறைகேடு புகார்களுக்கு உள்ளாகியுள்ளது. இந்தியா செய்தி

மகாராஷ்டிராவில் பெரும் நிதி முறைகேடு: சர்ச்சையில் சிக்கிய ‘லட்கி பகின்’ திட்டம்

  • August 10, 2026
  • 0 Comments

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபா வழங்கும் (Mukhyamantri Majhi Ladki Bahin Yojana) திட்டம், கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் நிதிச் சுதந்திரத்திற்கு முக்கிய காரணியாக அமைந்த போதிலும், தற்போது கடும் நிதித் தணிக்கை மற்றும் முறைகேடு புகார்களுக்கு உள்ளாகியுள்ளது. 2024 மாநிலத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன் ஆளும் ‘மகாஜுதி’ (Mahayuti) கூட்டணியால் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், அப்போதைய தேர்தலில் ஆளுங்கட்சியின் வெற்றிக்கு மிகப்பெரிய அரசியல் பலமாகப் பார்க்கப்பட்டது. இந்திய தேசியத் தணிக்கையாளர் (Auditor) வெளியிட்ட தகவலின்படி, […]

பொலிஸ்மா அதிபரை மிரட்டிய மஹிந்தவின் சகா கைது இலங்கை செய்தி

பொலிஸ்மா அதிபரை மிரட்டிய மஹிந்தவின் சகா கைது

  • August 10, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று (10) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் முன்னெடுக்க்பபட்டுவந்த விசாரணை தொடர்பிலேயே அவர், கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுக்கு அவர் இன்று அழைக்கப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின்னர் கைது இடம்பெற்றுள்ளது. முன்னதாகச் செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சாகர காரியவசம், “அரசாங்கத்திற்குச் சேவை செய்வதைத் தவிர்த்து, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நேர்மையாகச் சேவையாற்றுமாறு தற்போதைய காவல்துறை மா […]

நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில்தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தியா செய்தி தமிழ்நாடு

தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முதலிடம்: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

  • August 10, 2026
  • 0 Comments

நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில்தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முதலிடம் வழங்கும் வகையிலான தனித் தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தாக்கல் செய்து முன்மொழிந்தார். தமிழ்த்தாய் வாழ்த்திற்கு 3-வது இடம் என்பது அவமானம் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடப்பட வேண்டும் என்பதைச் சட்டமாக்க வேண்டும் என்றும் […]

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களைக் கோரும், 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகிறது. அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம்: சட்ட சமருக்கு தயாராகும் சஜித் அணி

  • August 10, 2026
  • 0 Comments

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களைக் கோரும், 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகிறது. அரசியலமைப்புத் திருத்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தை தங்கள் கட்சி தொடர்ந்து […]